செவ்வாய், 5 ஜூன், 2012

கதீஷ் தொகுப்பு

1 . قَالَ رَسُوْلُ اللهِ صَلیَّ اللهُ عَلَیْهِ وَآلِهِ : الْعائِدُ فِیْ هِبَتِهِ کالعائِدِ فی قَیْئِهِ کسی که بخشش خود را پس بگیرد . مانند کسی است که استفراغش را بخورد. Who takes his gift back is like the one who eats his vomit . நபிகளார் நாயகம் ( ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹீ வஸல்லம் ) அவர்கள் கூறினார்கள் : 'யார் ஒருவர் தான் பிரருக்கு கொடுத்த நன்கொடையை மீளப் பெறுகின்றாரோ அவர் தான் எடுத்த வாந்தியை மீண்டும் உண்பதைப் போன்றாகும்' . (غررالحکم : 9884 ) 2 . الامام علی علیه السلام : عُدْ مَنْ لاَ یَعُوْدُکَ ، و أهِدْ إلی مَنْ لاَ یُهْدِی إلَیْکَ . از کسی که از تو عیادت نمی کند ، عیادت کن و به کسی که به تو هدیه نمی دهد ، هدیه بده . Visit the one who does not visit you , give gift to the does not give you a gift . இமாம் அலி ( அலைஹிஸ்ஸலாம் ) அவர்கள் கூறினார்கள் : 'உன்னைப் பார்க்க , சந்தித்து சுகம் விசாரிக்க வராதவரை நீ சென்று சந்தித்து சுகம் விசாரி . உனக்கு அன்பளிப்பு தராதிருப்பவருக்கு நீ அன்பளிப்பு வழங்கு' . کتاب من لا یحضره الفقیه : 3/300/4076 3 . قَالَ رَسُوْلُ اللهِ صَلیَّ اللهُ عَلَیْهِ وَ آلِهِ : إنَّ أَفْضَلَ الْهَدِیَّةِ وَ أَفْضَلَ الْعَطِیَّةِ اَلْکَلِمَةُ مِنْ کَلاَمِ الْحِکْمَةِ یَسْمَعهَا الْعَبْدُ ثُمَّ یَتَعَلَّمُهَا ، ثُمَّ یُعَلِّمُهَا بهترین هدیه یا بهترین عطا ، سخن حکیمانه ای است که آدمی آن را یاد بگیرد و سپس ( به دیگران ) یاد دهد . மிகவும் சிறந்த அன்பளிப்பு அல்லது கொடை ஒரு அறிவார்ந்த வார்த்தையாகும் . அது எவ்வாரெனில் ஒருவர் கற்று ஏனையோருக்கும் கற்றுக் கொடுக்கும் வகையில் அமைவதாகும் . The best or grant is a wisely word that a man hears and learns is first and then teaches (to others) . کنز العمال : 1507 4 . قال رسول الله صلی الله علیه و آله : اَلْهَدِیَّةُ عَلَی ثَلَاثَةِ اَوْجُهٍ : هَدِیَّةُ مُکَافَاةٍ ، وَ هَدِیَّةُ مُصَانَعَةٍ ، وَ هَدِیَّةُ للهِ عَزَّوَجَلِّ . هدیه بر سه گونه است : هدیه جبرانی ، هدیه رشوه ای و تملق آمیز ، و هدیه بخاطر خداوند عزوجل . Gifts are three kinds : the gift of compensation , the gift of bribe and flattery , and a gift for the sake of god , blessed and exalted . நபிகளார் நாயகம் ( ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹீ ) அவர்கள் கூறினார்கள் : '. அன்பளிப்புகள் மூவகைப்படும். பிரதியுபகாரமாக வழங்கப்படும் அன்பளிப்பு, இலஞ்சமாக வழங்கப்படும் அன்பளிப்பு, இறைதிருப்திக்காக வழங்கப்படும் அன்பளிப்பு' . الکافی : 5/141/1 5 . قال رسول الله صلی الله علیه و آله : - تَهَادَوا تَحَابُّوا ‘ تَهَادُوا فَإِنَّهَا تَذْهَبُ بِالضَّغَائِنِ به یکدیگر هدیه دهید ، تا نسبت به همدیگر با محبت شوید . به یکدیگر هدیه دهید ؛ زیرا هدیه کینه ها را می برد . Give gift to each other in order to be kind to each other . give gift to each other because it takes vindictiveness away . ஒருவருக்கொருவர் நன்கொடைகளை , அன்பளிப்புகளை பரிமாரிக் கொள்ளுங்கள் . அதனூடாக உங்களுக்கு மத்தியில் அன்பு உருவாகும் , நன்கொடை கொடுப்பதனூடாக உல்லத்திலுள்ள வெறுப்பு , குரோதம் இல்லாது போகின்றது .

வியாழன், 26 ஜனவரி, 2012

இமாம் ஜஃபர் ஸாதிக் (அலை) – ஓர் அறிமுகம்

இமாம் ஜஃபர் ஸாதிக் (அலை) – ஓர் அறிமுகம்
இமாம் ஜஃபர் ஸாதிக் (அலை) அவர்கள் ஷீஆக்களின் ஆறாவது இமாமும் எட்டாவது பரிசுத்தவானுமாவார்கள்.
அவர்களின் இயற்பெயர் : ஜஃபர்
அவர்களின் புனைப்பெயர் : அதிகமாக மக்கள் மத்தியில் அவர்களுக்கு புனைப் பெயராக அழைக்கப்பட்ட பெயர் அபூ அப்தில்லாஹ் என்பதாகும். இது தவிர, அபூ இஸ்மாயில், அபூ மூஸா போன்ற பெயர்களினாலும் அழைக்கப்பட்டார்கள்.
மேலும், ஸாதிக், பாழில், தாஹிர், ஸாபிர் போன்ற சிறப்புப் பெயர்களினாலும் அவர்கள் அழைக்கப்பட்டார்கள். இமாமவர்களுக்கு ஸாதிக் (உண்மையாளர்) என்ற பெயர் இடப்பட்டமைக்கான காரணம் ஜஃபர் கத்தாபிற்கும் (பொய்யன்) அவர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு எடுத்துக் காட்டப்பட வேண்டும் என்பதற்காகவே.
ஷெய்க் சதூக் அவர்கள் தமது அறிவிப்பில் குறிப்பிடுவதாவது, இமாம் ஹுஸைன் (அலை) அவர்களிடம் இருந்து இமாம் ஜஃபர் ஸாதிக் அவர்கள் தமது பாட்டனார் நபிகளார் (ஸல்) அவர்களின் ஹதீஸொன்றை பின்வருமாறு அறிவிக்கிறார்கள்: 'என்னுடைய மகன் ஜஃபர் இப்னு முஹம்மத் இப்னு அலீ இப்னுல் ஹுஸைன் இப்னு அலி இப்து அபீ தாலிப் பிறந்தால் அவருக்கு சாதிக் என்று பெயரிடப்படும். காரணம் அவரின்; பரம்பரையில் ஜஃபர் என்ற பெயருடைய மற்றொருவர் தன்னை இமாமெனப் பிரகடனப்படுத்திக் கொண்டிருப்பார். அவருக்கு கத்தாப் என்று பெயரிடப்படும்'.
அவர்களது தந்தையின் பெயர்: முஹம்மத் இப்னு அலீ இமாம் பாக்கிர் (அலை) ஆவார்கள்.
தாயாரின் பெயர் : உம்மு பர்வஃ ஆவார். அவர் காசிம் இப்னு மஹம்மத் இப்னு அபீ பக்கர் அவர்களின் புதல்வியாவார். இவரின் பெயர் பாத்திமா அவரின் புனைப் பெயர் உம்மு பர்வஃ ஆகும்.
பிறப்பு: இமாமவர்கள் ஹிஜ்ரி 83ம் வருடம் ரபீஉல் அவ்வல் 17ல் பிறந்ததாக, முதலாவது ஸஹீத் தனது பாடங்களிலும், கப்அமீ தனது மிஸ்பாஹிலும், தப்ரஸீ தனது இஃலாமுல் வராயிலிலும், பதால் தனது றவ்ழதுல் வாஇதீனிலிலும், ஷஹ்ர் ஆசூப் மனாகிபிலும் பதிவு செய்துள்ளனர். இமாம் ஜஃபர் ஸாதிக் (அலை) அவர்கள் நபிகளார் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகிற்கு வந்த அதே தினத்திலேயே இமாமவர்களும் பிறந்துள்ளார்கள்.
மரணம்: ஹிஜ்ரி 148 ஷவ்வால் 25ல் இமாமவர்கள் ஷஹீதாக்கப்பட்டார்கள் என குலைனி, முதலாவது ஷஹீத், முபீத் முதலானோர் தெளிவுபடுத்தியுள்ளனார். இமாமவர்களின் மரணம் ஷவ்வால் மாதத்தின் 25ம் நாளிலேயே இடம்பெற்றது என மற்றும் பல வரலாற்றாசிரியர்களும் தெரிவித்துள்ளனர். கப்அமீ மற்றும் தபர்ஸீ போன்றோர் ரஜப் மாதத்தின் அரைப் பகுதியில் இமாமவர்கள் மரணித்ததாகக் கூறியுள்ளனர்.
கலீபா மன்சூரினால் நஞ்சூட்டப்பட்டு இமாமவர்கள் ஷஹீதாக்கப்பட்டார்கள் என்பதாக மிஸ்பாஹில் கப்அமீ மற்றும் மனாகிப் என்பவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாழ்ந்த காலம்: 65 வருடங்கள்.
நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இடம்: மதீனாவின் பகீ என்ற மையவாடியில் மூன்று இமாம்களுக்கு அருகில், இமாம் அலீ (அலை) அவர்களின் தாயார் ஹஸ்ரத் பாத்திமா பின்து அசத் அவர்களின் அடக்கஸ்தலத்திற்கு அருகாமையில் அவர்களது அடக்கஸ்தலம் உள்ளது.
இமாமத்தின் காலம்: 34 வருடங்கள்.
சமகால மன்னர்கள்: ஹிஷாம் இப்னு அப்துல் முல்க், வலீத் இப்னு யசீத் இப்னு அப்துல் மலிக், யசீத் இப்னு வலீத் இப்னு அப்தில் மலிக் - நாகிஸ் என்ற புணைப் பெயரைக் கொணடவர், இப்றாஹீம் இப்னுல் வலீத், மர்வான் ஹம்மார், அபுல் அப்பாஸ் சப்பாஹ், மன்சூர் அப்பாஸ் ஆகியோர் இமாமவர்களது காலத்தில் ஆட்சியாளர்களாக இருந்தோராவர். கலீபா மன்சூரின் ஆட்சியின் 10ம் ஆண்டில் இமாமவர்கள் மரணம் அடைந்தார்கள்.
பிள்ளைகள்: இமாமவர்களுக்கு 10 பிள்ளைகள் இருந்ததாக ஷைக் முபீத் கூறியுள்ளார்: இஸ்மாயீல், அப்துல்லாஹ், உம்மு பர்வஃ (இவரின் தாயார் பாத்திமா பின்துல் ஹுஸைன் அவர்கள் இமாம் ஸஜ்ஜாத் (அலை) அவர்களின் பேரப் பிள்ளைகளுள் ஒருவராவார்), மூஸா அல்காழிம் (அலை), அஸ்கக், முஹம்மத் (இவரின் தாய் உம்மு வலத் ஆவார்), அப்பாஸ், அலீ, அஸ்மாஉ, பாத்திமா (அதிகமானவர்களின் தாய்), இஸ்மாயீல் அவர்களே இமாமவர்களின் பிள்ளைகளில் மூத்தவராவார். ஆதலால் இவரே இமாம் என பலரும் எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால் இவேரா தமது தந்தையின் காலத்திலேயே மரணித்துவிட்டார்.
இமாமவர்களின் சிறப்புகள்:
1. அபூ பஸ்ரா கூறுகிறார் : நான் மதீனாவை சென்றடைந்த பின் எனது அடிமைப் பெண்ணுடன் உடலுறவில் ஈடுபட்டுவிட்டு குளிப்பை நிறைவேற்றுவதற்காக குளியல் அறையை நோக்கிச் செல்கையில் என்னுடைய தோழர்கள் இமாம் ஜஃபர் சாதிக் (அலை) அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்று கொண்டிருப்பதைக் கண்டேன். இதைத் தவறவிட்டால் இமாமவர்களைச் சந்திக்க எனக்கு வாய்ப்புக் கிடைக்காது போய் விடும் என்றெண்ணிய நான், குளிக்கும் எண்ணத்தைக் கைவிட்டு விட்டு, அதே நிலையில், இமாமவர்களைச் சந்திப்பதற்காக எனது நண்பர்களுடன் இணைந்து கொண்டேன்.
அவ்வேளையில், இமாமவர்கள் என்னைப் பார்த்து, 'யா அபாபஸீர்! மனிதர்கள் தாம் குளிப்புக் கடமையாக இருக்கும் போது நபிமார்களினதும் இறைநேசர்களினதும் வீட்டிற்குள் நுழைவதில்லை என்பது உங்களுக்கு தெரியாதா!' எனக் கேட்டார்கள். நான் வெட்கத்திற்குள்ளாகி இமாமவர்களைப் பார்த்து கூறினேன்: 'நபிகளாரின் புதல்வரே! எனது தோழர்கள் தங்களைச் சந்திக்க வருவதைக் கண்டேன். இச்சந்தர்ப்பத்தைத் தவற விட்டால், இனி தங்களைச் சந்திக்கக் கிடைக்காது என்பதனாலேயே இந்நிலையிலும் வந்து விட்டேன். இனிமேல் இவ்வாறு நடந்து கொள்ளமாட்டேன்'.
அப்போது இமாம் அவர்கள், 'மூஸாவின் தவ்ராத் பட்டோலை எங்களிடம் இருக்கின்றது, மூஸாவின் ஊன்றுகோல் எங்களிடம் இருக்கின்றது, நாங்கள் நபிமார்களின் வாரிசுகளாக இருக்கின்றோம்' என்று கூறினார்கள்.
2. அப்பாஸிய கலீபா மன்சூர், தனது பணியாளர்களில் ஒருவரான ரபீஐ அனுப்பி, இமாம் ஸாதிக் (அலை) அவர்களை தனது தர்பாரிற்கு அழைப்பு விணடத்தான். இமாமவர்கள் மன்சூரின் இருப்பிடத்தை வந்தடைந்ததும், மன்சூர் பெரும் சினத்துடன் இமாமவர்களை நோக்கி, 'நான் உம்மைக் கொல்லாது விட்டால் இறைவன் என்னைக் கொல்லட்டும், எனது ஆட்சியை எதிர்த்து எனக்கு எதிராக பிரச்சாரம் செய்ய முயற்சி செய்கிறீரோ?' எனக் கேட்டான்.
இமாமவர்கள் கூறினார்கள்: 'இறைவன் மீது ஆணையாக, நான் இவ்வாறான ஒரு வேலையை செய்யவில்லை, இவ்வாறான ஒரு தகவல் சொல்லப்பட்டிருந்தால் அது பொய்யாகும், சொன்னவர் ஒரு பொய்யராவார்:
மன்சூரின் கோபம் சற்றுத் தணிந்தது. அவன், இமாமவர்களை தன்னிடம் அழைத்து, 'இன்னாரின் மகன் இன்னார் இந்த செய்தியை எனக்கு சொன்னார்' என்று கூறினான். அவரை எனக்கு முன்னால் வரவழையுங்கள் என இமாமவர்கள் கூறினார்கள்.
குறித்த நபர் அழைக்கப்பட்டார். அவரை நோக்கிய மன்சூர், 'நீ ஜஃபர் இப்னு முஹம்மத் பற்றி அவ்வாறு கூறப்பட்டதை செவிமடுத்தாயா?' எனக் கேட்டார். அதற்கவர் 'ஆம்' என்றார். இமாமவர்கள், மன்சூரை நோக்கி, 'அவ்வாறெனில் சத்தியம் செய்யச் சொல்லுங்கள்' என்றார்கள். 'சத்தியம் செய்வீரா?' என மன்சூர் கேட்க, அம்மனிதர் 'ஆம்' என்றார். அவர் சத்தியம் செய்யத் தயாரான போது, இமாமவர்கள் அம்மனிதரை நோக்கி, 'சத்தியம் செய்வதெனில், இவ்வாறு கூறும்: 'நான் இறைவனின் சக்தியை விட்டும் தூரப்பட்டு, என் சக்தியின் மீது சத்தியம் செய்கின்றேன்'. அம்மனிதன் இதைச் சொல்லுவதற்குச் சற்று தயங்கினான். பின் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவ்வாறு சத்தியம் செய்தான். அடுத்த நொடியே, அவன் தரையில் விழுந்து தனது கைகால்களை உதறிக் கொண்டு மரணித்துப் போனான்.
இமாம் ஸாதிக் (அலை) அவர்கள் கூறினார்கள்: 'அவனின் காலில் பிடித்து இழுத்துச் சென்று அவனது உடலை வெளியே கொண்டு சென்று வீசுங்கள் இறைவன் அவனை தூஷிக்கட்டும்'.
3. மதீனாவின் ஆட்சியாளராக இருந்த தாவூத் இப்னு அலி இப்னு அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் என்பவன், இமாமவர்களின் பிரதிநிதியான முஅல்லீ இப்னு குனைஸைக் கொலை செய்து விட்டு, அம்மனிதரிடமிருந்த இமாமவர்களின் சொத்துக்கள் அனைத்தையும் அபகரித்துக் கொண்டான். அதையறிந்த இமாமவர்கள் தாவூதின் மாளிகைக்குள் நுழைந்தார்கள். அங்கிருந்த தாவூதைப் பார்த்துக் கூறினார்கள்: 'என்னுடைய பிரதிநிதியைக் கொன்று விட்டு அவரிடமிருந்த என்னுடைய சொத்துகளையும் அபகரித்துக் கொண்டாயா? அநீதி இழைக்கப்பட்டவனின் சாபம் மனிதனை அழித்துவிடுமென்று உனக்குத் தெரியாதா? இறைவன் மீது ஆணையாக உன் மீது அழிவு உண்டாகட்டும்'.
'என்னை உமது துஆவைக் கொண்டு பயமுறுத்துகிறீரா?' என பதிலுக்கு தாவூதும் உரத்த குரலில் கூறி, இமாமவர்களை அனுப்பி விட்டான். இமாமவர்கள் தமது இல்லத்திற்குத் திரும்பி வந்து விட்டார்கள். அன்றைய இரவு முழுவதும் இறைவனை வணங்குவதில் கழித்தார்கள். பிரார்த்தனையும் புரிந்தார்கள்.
அதிக நேரம் செல்லவில்லை. தாவூதின் வீட்டிலிருந்து அழுகை ஓசை கேட்டது. தாவூதின் மரணச் செய்தி கொண்டுவரப்பட்டது.
4. அபூபஸீர் கூறுகிறார்: 'எனக்கு ஓர் அண்டை வீட்டுக்காரர் இருந்தார். அவர் கலீபாவை பின்பற்றக் கூடியவராக இருந்தார், தனது சொத்திலிருந்து ஒரு பகுதியை செலவிட்டு, பாடலிசைக்கக் கூடிய வேலைக்காரப் பெண்களை விலைக்கு வாங்கினார். மக்கள் அவரின் வீட்டில் ஒன்று சேர்ந்தார்கள், மதுபானம் அருந்தினார்கள், கூச்சலிட்டார்கள், நான் மிகவும் கஷ்டத்திற்குள்ளானேன். இது பற்றிப் பல தடவைகள் அவ்வீட்டுக்காரருக்கு எடுத்துக் கூறியும் அவர் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை.
ஒரு நாள் இது பற்றி மிகவும் கண்டிப்பாக அவருக்கு கூறினேன். அப்போது அவர் என்னைப் பார்த்துக் கூறினான்: 'நான் மிகவும் கஷ்டத்திற்குள்ளானவனாக இருக்கின்றேன். நீங்களோ நல்ல நிலைமையில் இருக்கிறீர்கள். என்னுடைய நிலைமையைப் பற்றி உங்களது தலைவரிடம் (இமாம் ஸாதிக் (அலை) அவர்களிடம்) எடுத்துக் கூறுவீராக. சிலவேளை இறைவன் அவரின் பொருட்டினால் என்னை விடுதலையாக்கட்டும்'.
அம்மனிதனின் பேச்சு என்னில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. உடனே நான் இமாமவர்களிடம் சென்று இவ்விடயம் பற்றி அவர்களிடம் கூறினேன்.
இமாம் அவர்கள் கூறினார்கள்: 'நீங்கள் கூபாவுக்குப் போய்ச் சேர்ந்தவுடன் அவர் உங்களைச் சந்திக்க வருவார். அவருக்கு நீங்கள் சொல்லுங்கள்: 'நீங்கள் செய்கின்ற அந்தச் செயலைச் செய்யாது தவிர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய சுவனத்திற்கு நான் பொறுப்பாக இருக்கிறேன்' என ஜஃபர் இப்னு முஹம்மத் சொன்னார் எனக் கூறுங்கள்' என்றார்கள்.
நான் கூபாவுக்கு வந்தவுடன் என்னைப் பார்ப்பதற்காக அந்தத் தோழர் வந்தார். அவரு;குச் சொன்னேன்: 'உங்களுடைய சம்பவத்தை இமாமவர்களிடம் சொன்னேன். இமாமவர்கள் உங்களிடம் இவ்வாறு சொல்லச் சொன்னார்கள்: 'உன்னுடைய வேலையில் இருந்து தூரப்படு, நான் உன்னுடைய சுவர்க்கத்திற்கு பொறுப்புதாரியாக இருக்கின்றேன்'.
இந்த செய்தியைச் செவிமடுத்தவுடன் அவர் அழத் தொடங்கி விட்டார். பின் அவர் என்னைப் பார்த்து, 'இறைவன் மீது ஆணையாக, இமாமவர்கள் இவ்வாறா கூறினார்கள்?' எனக் கேட்டார். நானும் 'சத்தியமாக இவ்வாNறு கூறினார்கள்' என்றேன். அப்போது அவர் என்னைப் பார்த்து: 'போதும்' என்று கூறிவிட்டுப் போய்விட்டார், சில நாட்களின் பின்னர் என்னை வருமாறு அழைத்தார். அவரது வீட்டுக்கு சென்றேன். வீட்டின் கதவுக்குப் பின்னால், எவ்வித ஆடையுமின்றி நின்று கொண்டு அவர் கூறினார்:
'இறைவன் மீது ஆணையாக, வீட்டில் எதுவெல்லாம் இருந்ததோ அனைத்தையும் கொடுத்துவிட்டேன். இப்போது உடுப்பதற்கு உடையுமில்லாதிருக்கின்றேன்'.
கவலையுற்ற நான், முஃமின்களிடமிருந்து சில உடைகளைச் சேகரித்து எடுத்து வந்து அவருக்குக் கொடுத்தேன்.
சில நாட்களின் பின், 'நான் நோயுற்றிருக்கிறேன் என்னைப் பார்க்க வாருங்கள்' என்று அழைப்பு விடுத்திருந்தார். தொடர்ச்சியாக அவரைப் பார்த்து சுகம் விசாரிப்பதற்காகச் சென்றேன். அப்போது அவரை மரணம் தழுவிக் கொண்டது. அவர் மரணிக்கும் போது நான் அவரிடம் இருந்தேன். அப்போது அவர் மயக்கமுற்று பின் சற்று நேரத்தின் பின் எழுந்து என்னிடம்: 'அபா பஸீரே! இமாம் சாதிக் (அலை) அவர்கள் எனக்குத் தந்த வாக்கின் பிரகாரம் வாக்கை நிறைவேற்றிவிட்டார்கள்' என்று கூறியவாறு மரணமடைந்தார். இறைவன் அவருக்கு அருள் புரியட்டும்.
நான் ஹஜ்ஜுடைய காலத்தில் இமாம் சாதிக் (அலை) அவர்களைப் பார்க்கச் சென்றிருந்தேன். அனுமதி பெற்று உள்ளே நுழையும் போது, இமாமவர்கள் என்னைப் பார்த்துக் கூறினார்கள்: 'அபா பஸீரே! நாங்கள் தந்த வாக்குறுதி போன்று உங்களது நண்பரின் விடயத்தில் நடந்து கொண்டோம்!' என்றார்கள்.
5. ஹன்னான் இப்னு சதீர் கூறுகிறார்: 'என்னுடைய தந்தை சதீர் செய்ரபீ இவ்வாறு கூறியதை நான் செவியுற்றுள்ளேன்: 'நான் நபிகளார் (ஸல்) அவர்களை கனவில் கண்டேன். அவர்களுக்கு முன்னால் ஒரு தட்டம் இருந்தது. அது புடவையால் மூடப்பட்டிருந்தது. அப்போது நான் நபிகளாரின் அருகில் சென்று ஸலாம் சொன்னேன். அவர்களும் பதிலளித்தார்கள். அந்நேரத்தில் அத்தட்டத்தின் மேலிருந்த புடவையை இமாமவர்கள் எடுத்தார்கள். பின் அதிலிருந்த பேரீத்தம் பழங்களை எடுத்து உண்ண ஆரம்பித்தார்கள். நான் முன்னே சென்று, 'அல்லாஹ்வின் தூதரே! எனக்கும் அந்த ஈத்தம் பழங்களில் சில தாருங்கள்' என்று கேட்ட போது அவர்கள் அவற்றிலிருந்து சிலவற்றை எடுத்துத் தந்தார்கள்: அல்லாஹ்வின் தூதரே! இன்னுமொன்று தாருங்கள் என்றேன் என மீண்டும் நான் கேட்ட போதும் அவர்கள் தந்தார்கள். அதனையும் உண்டேன். இவ்வாறாக எட்டு பேரீத்தம் பழங்களை உண்டேன். அதன்பின்னும் ஒன்று கேட்டேன் . நபிகளார் ( ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வஸல்லம் ) போதும் என்றார்கள் .
அந்த நேரத்தில் தூக்கத்திலிருந்து எழுந்தேன் அந்த சம்பவம் நடந்து அடுத்த நாள் இமாம் சாதிக் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைப் பார்ப்பதற்காகச் சென்றேன். ஹஸ்ரத் அவர்களிற்கு முன்னால் ஒரு தட்டம் வைக்கப்பட்டிருந்தது நான் கனவில் கண்டது போன்றே அது இருந்தது.
இமாம் அவர்களுக்கு முன்னால் சென்று ஸலாம் கூறினேன். ஸலாத்திற்கு பதிலளித்தார்கள். அந்நேரத்தில் இமாமவர்கள் அத்தட்டத்தின் மீதிருந்த புடவையை எடுத்தார்கள். அதனுள் புதிய பேரீத்தம் பழங்கள் இருந்தன. இமாமவர்கள் அதிலிருந்து எடுத்து உண்ண ஆரம்பித்தார்கள், ஆச்சரியத்துடன் அவர்களைப் பார்த்து, 'எனக்கும் அந்த ஈத்தம் பழத்தில் தாருங்கள்' என்று கேட்டேன். ஒன்று தந்தார்கள். உண்டேன் பின்னும் ஒன்று கேட்டேன். இவ்வாறாக எட்டு பேரீத்தம் பழங்கள் வரையும் உண்டேன் பின் 'நபிகளாரின் மகனே! இன்னும் ஒன்று தாருங்கள்' என்றேன்.
அப்போது இமாம் அவர்கள்: 'எங்களுடைய முப்பாட்டனார் நபிகளார் (ஸல்) அவர்கள் இதை விட அதிகமாகத் தந்திருந்தால் நாங்களும் தந்திருப்போம்' என்றார்கள். அவ்வேளையில் நான் கண்ட கனவை இமாமவர்களிடம் கூறினேன். அப்போது இமாமவர்கள், தமக்கு ஏற்கனவே இச்சம்பவம் தெரிந்தவரைப் போன்று புன்முறுவல் செய்தார்கள்.



(இது தொடரும்)

புதன், 10 ஆகஸ்ட், 2011

ramazan

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
புனித ரமழான் வரட்டும் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தோம் வந்து விட்டது அதை இப்போது எவ்வாறு உபயோகப் படுத்துவது என்று தெரியாது பலர் கிரேம் போட் விளையாடுவதும் ஏனைய பல நேரத்தை வீணடிக்கக் கூடிய செயல்களில் ஈடுபடுவதும் வழக்கம் ஆனால் இந்த மாதத்தில் செய்யக் கூடிய எவ்வளவு இபாதத்துக்களிருக்கின்ற அவற்றை ஏன் செய்ய முயற்சிப்பதில்லை அன்பான சகோதர சகோதரிகளே இந்த மாதத்தில் குர்ஆனை அதிகமாக ஒதுவது , அதிகமான சுன்னத்தான தொழுகைகளை தொழுவது , அதிகமாக சகாத் கொடுப்பது , ஏனையவர்களுக்கு துஆச் செய்வது , இந்த மாதத்திலாவது மற்றவர்களின் குறைகளைக் கதைக்காது ஏனையவர்களுடன் சந்தோசமாக நள்ள விடயங்களை கதைத்து , நபிகளார் நாயகம் (ஸல்) மற்றும் அவர்களின் தோழர்களின் அழகிய வார்த்தைகளை மற்றவர்களடம் சொல்லி அவற்றை வாழ்க்கையில் நடைமுறைக்கு கொண்டு வந்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றிபெற முயற்சித்தல் ஏனென்றால் இக்காலத்தில் நபிகளாரின் அழகிய வார்த்தைகள் சமூகத்தாரிற்கு மத்தியில் மறைக்கப் பற்று மாற்றங்களுக்கு உள்ளாக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன எனவே இந்த கொடிய அகோரமான சௌலை தடுத்து நிறுத்த முயற்சிப்போம் மற்றும் யார் நபிகளாரின் வார்த்தைகளை எவ்வாறு சொல் வேண்டுமோ அவ்வாறு சொல்லாது தான் விரும்பியவாறு கறுத்துக் கூறுபவர்களின் கொடிய செயலில் இருந்து உம்மத்தை பாதுகாப்போம் இந்த மாதத்தை எந்தளவிற்கு முடியுமோ அந்தளவிற்கு முடியுமோ அந்தளவிற்கு சிறப்பாக பயன்படுத்துவோம்
மற்றுமொரு முக்கியமாக சொல்லப்படவேண்டிய விடயம் இந்த மாதத்தை அதிகமான முஸ்லிம்கள் அல்லாத ஏனைய மதத்pனர் நினைக்கின்றார்கள் ஏனெனில் அதிகமான முஸ்லிம்கள் இந்த மாதத்தில் அதிகமாக ஏயைவர்களிடம் யாசகம் அதாவது பிச்சை கேட்டு திரிவது இவ்வாரானவர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள் மற்றும் அதே முந் நிளையில் அன்பின் செல்வந்தர்களே உங்களின் செல்வத்திலிருந்து இந்த மாதத்தில் அதிகமாக தானம் கொடுங்கள் அப்போதுதான் உங்கள் செல்வங்களின் பரகத்தும் அதிகமும் வரும் எனவே முயற்சியுங்கள் அதிகமானவர்கள் சொல்லுவார்கள் இறைக்க இறைக்கத்தான் கிணறு ஊற்றெடுக்கும் என்பார்கள் எனவே உங்களின் செலவக் கிணற்றை இறையுங்கள் புதிய செல்வங்கள் ஊற்றெடுக்கும் மற்றும் உங்கள் வீடுகளில் பரகத்தும் அல்லாஹ்வின் அருளும் ஏற்படும் இன்றிலிருந்து இவ்வாறு செய்வோமென முதலில் எனக்கும் அதன் பின் உங்ளுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன் .
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ்
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ ஆலி முஹம்மத்
வ அஜ்ஜில் பரஜ இமாமினல் மஹ்தி ( அலை )

சனி, 16 ஏப்ரல், 2011

ஹழ்ரத் ரசூல் (ஸல்) அவர்களை தூர இடத்தில் இருந்து (சந்தித்தல்) சியாரத் செய்தல்

ரசூல் (ஸல்) அவர்களை அவர்கள் பிறந்த ரபீஉல் அவ்வல்மாதத்தில் அவர்கள் பிறந்த நாளில் தூர இடத்தில் இருந்து ஸியாரத்செய்யும் விதம் பற்றி ஸாதுல் மஆத் எனும் நூலில் அல்லாமா மஜ்லிஸி(றஹ்) கூறும் போது செய்கு முபீத், ஷஹீத், செய்யித் பின் தாவூஸ் (ரஹ்)அவர்கள் அறிவிப்பதாக குறிப்பிடுகின்றனர்.
மதீனா தய்யிபாவுக்கு வெளியிலிருந்து நபி (ஸல்) அவர்களைஸியாரத் செய்ய விரும்பினால் முதலில் குளித்துக் கொள்ளவும். பின்னர் நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலம் போன்ற ஒன்றை அமைத்து அதன்மேல் நபி (ஸல்) அவர்களின் முபாரக்கான பெயரை எழுதி எழுந்து நின்றுஅதனை முன்னோக்கியவனாக இதனை ஓதவும்.








بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيْمِ
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை என சாட்சி கூறுகின்றேன். அவன் தனித்தவன் அவனுக்கு இணை இல்லை.
وأشهد أن محمدا عبده ورسوله
நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அவனுடைய அடியானும் அவனுடைய தூதருமாயிருக்கும்.
وأنه سيد الأولين والآخرين
நிச்சயமாக அவர்கள் முன்னையோர் பின்னையோர்களின் தலைவர் ஆவார்கள்.
وَأَنَّه سيد الأنبياء والمرسلين
நிச்சயமாக அவர்கள் நபிமார்கள் ரஸூல்மார்களின் தலைவர் ஆவார்கள்.
اَللَّهُمَّ صَلِّ عَلَيْهِ وَعَلَى أَهْلِ بَيْتِهِ الْأئِمَّةِ الطَّـيِّـبِـيْنَ
இறைவா! அந்த நபி மீதும் அவர்களின் அஹ்லுல் பைத் பரிசுத்த இமாம்கள் மீதும் ஸலவாத் சொல்வாயாக!
اَلسّلاَمُ عَلَيْكَ يَا رَسُوْلَ اللهِ
அல்லாஹ்வின் தூதரே உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَيْكَ يَا خَلِيْلَ اللهِ
அல்லாஹ்வின் நண்பரே உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!

اَلسّلاَمُ عَلَيْكَ يَا نَبِيَّ اللهِ
அல்லாஹ்வின் நபியே! உங்கள் மீது சாந்தி உண்டாவதாக

اَلسّلاَمُ عَلَيْكَ يا صفي الله
அல்லாஹ்வால் தெழிவாக்கப்பட்டவரே உங்கள் மீது சாந்தி உண்டாவதாக
اَلسّلاَمُ عَلَيْكَ يا رحمة الله
அல்லாஹ்வின் அருளே! உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَيْكَ يا خيرة الله
அல்லாஹ்வின் தெரிவே! உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَيْكَ يا حبيب الله
அல்லாஹ்வின் நண்பரே! உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَيْكَ يا نجيب الله
அல்லாஹ்வின் தெரிவே! உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَيْكَ يا خاتم النبيين
நபிமார்களில் இறுதியானவரே! உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَيْكَ يا سيد المرسلين
ரசூல்மார்களின் தலைவரே! உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَيْكَ يا قائما بالقسط
நீதமானவரே! உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَيْكَ يا فاتح الخير
நலவின் திரவுகோலே! உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَيْكَ يا معدن الوحي والتنزيل
குர்ஆன் இறங்கியதனுடையவும், வஹியினுடையதும் ஊற்றே உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَيْكَ يا مبلغا عن الله
அல்லாஹ்வைப்பற்றி பிரச்சாரம் பண்ணக்கூடியவரே உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَيْكَ أيها السراج المنير
ஒழிதரும் விளக்கே! உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَيْكَ يا مبشر
நன்மாராயம் கூறக்கூடியவரே! உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَيْكَ يا منذر
எச்சரிக்கை விடுக்கக் கூடியவரே! உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَيْكَ يا نور الله الذي يستضاء به
ஒழிபெறக்கூடிய அல்லாஹ்வின் ஒழியே! உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَيْكَ وعلى أهل بيتك الطيبين الطاهرين الهادين المهديين
நேர்வழி பெற்றவர்களும், நேர்வழி காட்டக்கூடியவர்களுமான சுத்தமான மணமான குடும்பத்தினர் மீதும், உங்கள் மீதும் சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَيْكَ وعلى جدك عبد المطلب وعلى أبيك عبد الله
உங்கள் தந்தை அப்துல்லாஹ் மீதும், உங்கள் பாட்டனார் அப்துல் முத்தலிப் மீதும், உங்கள் மீதும் சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَيْكَ وَعَلَى أُمِّكَ آمِنَةَ بِنْتِ وَهْبٍ
வாஹாபின் மகன் ஆமினாவான உங்கள் தாயின் மீதும் உங்கள் மீதும் சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَي عَمِّكَ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ
அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸ் ஆகிய உங்கள் சிறிய தந்தை மீதும் சாந்தி உண்டாவதாக
اَلسّلاَمُ علي عمك وكفيلك أبي طالب
உங்களை வளர்த்த உங்கள் சிறிய தந்தை அபூதாலிப் மீதும் சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ علي عمك حمزة سيد الشهداء
'சையிதுஷ் சுஹாதா' உங்கள் சிறிய தந்தை ஹம்ஸா அவர்கள் மீது சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ علي ابن عمك جعفر الطيار في جنان الخلد
நிரந்தர சுவர்கங்களில் பறந்து திரியக் கூடிய உங்கள் சாச்சாவின் மகன் மீதும் சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَيْكَ يا محمد
முஹம்மதே (ஸல்) உங்கள் மீதும் சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَيْكَ يا أحمد
அஹ்மதே! உங்கள் மீதும் சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَيْكَ يا حجة الله على الأولين والآخرين
முன்னையோர் பின்னையோர் மீது அல்லாஹ்வின் அத்தாட்சியே உங்கள் மீதும் சாந்தி உண்டாவதாக!
والسابق إلى طاعة رب العالمين
முன்னையோர் படைத்து பரிபாளிக்கக் கூடியவனை வழிபடுவதில் முந்திக் கொள்ளக் கூடியவரே!
والمهيمن على رسله
அவனுடைய தூதுவர்கள் மீது அதிகாரம் செலுத்தக் கூடிய
والخاتم على أنبيائه
அவனுடைய நபிமார்களுக்கெல்லாம் முத்திராங்கமான (இருதியான)
والشاهد على خلقه
அவனுடைய படைப்புக்கள் சாச்சியாக இருக்கக்கூடிய
والشفيع إليه
அவனிடத்தில் பரிந்துரைக்கக் கூடிய
والمكين لديه
அவனிடத்தில் உறுதியான
والمطاع في ملكوته
அவனுடைய ஆட்சி அதிகாரத்தில் வழிப்படக்கூடிய
الأحمد من الأوصاف
வர்னனையில் மிக புகழப்பட்ட
المحمد لسائر الأشراف
ஏனைய சிறப்புக்களில் புகழப்பட்ட
الكريم عند الرب
படைத்து பரிபாழிக்கக்கூடியவனிடத்தில்
المكلم من وراء الحجب
திரைகளுக்கு அப்பால் பேசப்பட்ட
الفائز بالسباق
முந்திக்கொள்வதில் வெற்றி பெற்ற
الفائت عن اللحاق
தப்பியதை அடைத்து கொள்ளக்கூடிய
تسليم عارف بحقك
உண்னுடைய கடமைகளை அறிந்து வழிபடக்கூடிய
معترف بالتقصير في قيامه بواجبك
உண்னுடைய கடமைகளை நிறைவேற்றுவதில் குறை ஏற்பட்டதாக ஏற்றுக்கொண்டு
غير منكر ما انتهى إليه من فضلك
உண்னுடைய வரிசையை சென்றடையக்கூடிய விடயத்தை நிராகரிக்காதவராக
موقن بالمزيدات من ربك
இறைவனிடமிருந்து அதிகரித்தலை உறுதி கொண்டவராக
مؤمن بالكتاب المنزل عليك
நீ அவரின் மீது இறக்கிய வேதத்தை விசுவாஷம் கொண்டவராக
محلل حلالك
உண்னுடைய ஹலாலை ஹலாலாக்கியவனாக
محرم حرامك
உண்னுடைய ஹராத்தை ஹராமாக்கியவனாக
أشهد يا رسول الله مع كل شاهد
ஒவ்வொரு சாட்சியாளருடனும் அல்லாஹ்வின் தூதரே நான் சாட்சி கூறுகிறேன்
وأتحملها عن كل جاحد
பெருமனம் கொண்டு பொறுத்தவராக (உன்னை) நிராகரித்த அனைவரையும்
أنك قد بلغت رسالات ربك
நிச்சயமாக நீங்கள் உம்முடைய இறைவனின் தூதை எத்திவைத்தீர்கள்
ونصحت لأمتك
உங்களின் சமூகத்திற்கு நீங்கள் உபதேசம் செய்தீர்கள்
وجاهدت في سبيل ربك
உங்களுடைய ரப்புடைய பாதையில் நீங்கள் தியாகம் செய்தீர்கள்
وصدعت بأمره


அவனுடைய விடயத்தை தெழிவாகச் சொன்னீர்கள்
واحتملت الأذى فى جنبه
அவனுடைய விடயத்தில் துன்பங்களை தாங்கிக் கொண்டீர்கள்
ودعوت إلى سبيله بالحكمة والموعظة الحسنة الجميلة
அவனுடைய பாதையில் ஞான அறிவைக் கொண்டும் அழகிய உபதேசங்கள் மூலமும் அழைத்தீர்கள்
وأديت الحق الذي كان عليك
உங்கள் மீதுள்ள கடமைகளை நீங்கள் நிறைவேற்றினீர்கள்
وأنك قد رؤفت بالمؤمنين
முஃமீன்கள் மீது நிச்சயமாக இரக்கம் உள்ளவராக ஆனீர்கள்
وغلظت على الكافرين
காபிர்களுடன் கடினமானவர்களாக இருந்தீர்கள்
وعبدت الله مخلصا حتى أتاك اليقين
இறுதிவரை இறைவனை தூய்மையான என்னத்துடன் வணங்கி வழிபட்டீர்கள்
فبلغ الله بك أشرف محل المكرمين
அதன் மூலம் கண்ணிய மாக்கப்பட்டவர்களின் மிகச் சிறந்த இடத்தை அடைந்தீர்கள்
وأعلى منازل المقربين
உனக்கு நெருக்கமானவர்களின் மிக உயர்ந்த இடத்தை அடைந்தீர்கள்
وأرفع درجات المرسلين حيث لا يلحقك لاحق
ரசூல் மார்களின் பதவிகளில் மிக உயர்வான மற்றயவர்கள் அடயமுடியாத தரத்தையும்
ولا يفوقك فائق
மற்றவர்கள் உயர முடியாத உயர்வையும்
ولا يسبقك سابق
உங்களை யாரும் முந்திக் கொள்ள முடியாது
ولا يطمع في إدراكك طامع
எந்த ஆசை உடையவர்களின் ஆசையும் உங்களை அடைய முடியாது
الحمد لله الذي إستنقذنا من الهلكة
அழிவை விட்டும் உங்கள் மூலமாக எம்மை காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகளும்
وهدانا من الضلالة
வழிகேட்டிpல் இருந்து எம்மை நேர்வழிப்படுத்தினான்
ونورنا بك من الظلمة
இருலில் இருந்து உங்கள் மூலம் எம்மை ஒழி மயமாக்கி வைத்தான்
فجزاك الله يا رسول الله من مبعوث أفضل ما جازى نبيا عن أمته
ஒரு சமூகத்திற்கு நபியாக அனுப்பியதன் மூலம் எந்த சிறந்த கூலியை கொடுத்தாயோ அதில் சிறந்ததை உங்களை நபியாக அனுப்பியதன் மூலம் அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்குக் கொடுப்பானாக
கொடுப்பானாக!
ورسولا عمن أرسل إليه
இது தூதுவரை அவர்களுக்கு தூதுவராக அனுப்பியதன் மூலம்
بأبي وأمي يا رسول الله
அல்லாஹ்வின் தூதரே என் தாயும் தந்தையும் உங்களுக்கு அற்பணம்
زرتك عارفا بحقك
உங்கள் கடமைகளை அறிந்தவனாக உங்களை நான் சந்திக்கிறேன்
مقرا بفضلك
உங்கள் வரிசையை ஏற்றுக்கொண்டவனாக!
مستبصرا بضلالة من خالفك وخالف أهل بيتك
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மாறு செய்தவர்கள் வழிகேட்டிpல் உள்ளவர்கள் என்பதை தெழிவு பெற்றவனாக
عارفا بالهدى الذي أنت عليه
நீங்கள் எந்த நேர்வழியில் உள்ளீர்களே அதை அறிந்தவர்களாக
بأبي أنت وأمي ونفسي وأهلي ومالي وولدي
எனது பிள்ளை, எனது பொருள், குடும்பம் எனது ஆத்மா தாய் தந்தை அனைத்தும் உங்களுக்கு அற்பனம்
أنا أصلى عَلَيْكَ كما صلى الله عليك
அல்லாஹ் உங்கள் மீது ஸலவாத் சொன்னது போன்று நான் உங்கள் மீது ஸலவாத்துச் சொல்கிறேன்
وصلى عَلَيْكَ ملائكته وأنبيائه ورسله
மேலும் அவனுடைய அமரர்கள், நபிமார்கள், ரசூல் மார்கள் சொன்ன சலவாத்துப் போன்று
صلاة متتابعة وافرة متواصلة لانقطاع لها
தொடரான, நிறைவான, அதிக, துண்டிக்கப்படாத சலவாத்தாக
ولا أمد ولا أجل
முடிவு இல்லாத தொடரான ஸலவாத்தாக
صلى الله عليك وعلى أهل بيتك الطيبين الطاهرين كما أنتم أهله
உங்கள் மீதும், உங்களின் சுத்தமான பரிசுத்த குடும்பத்தினர் மீதும் அவர்களின் தகுதிக்கு ஏற்றவாறு அல்லாஹ் ஸலவாத்துச் சொல்வானாக.


أَللَّهُمَّ اجْعَلْ جَوَامِعَ صَلَوَاتِكَ
உன்னுடைய ஸலவாத்தில் அனைத்தும் உள்ளடங்கியவையாகவும்
وَنَوَامِيَ بَرَكَاتِكَ
உன்னுடைய அருளில் வளர்ச்சியையும்
وَفَوَاضِلَ خَيْرَاتِكَ
உன்னுடைய நலவுகளில் அதிகமானவைகளையும்
وَشَرَائِفَ تَحِيَّاتِكَ
உன்னுடைய காணிக்கைகளில் சிறந்தவைகளையும்
وَتَسْلِيْمَاتِكَ وَكَرَامَاتِكَ وَرَحْمَاتِكَ وَصَلَوَاتِ مَلاَئِكَتِكَ الْمُقَرَّبِيْنَ وَأَنْبِيَائِكَ الْمُرْسَلِيْنَ وَأَئِمَّتِكَ الْمُنْتَجَبِيْنَ وَعِبَادِكَ الصَّالِحِيْنَ وَأَهْلِ السَّمَوَاتِ وَاْلأَرَضِيْنَ
உன்னுடைய சமாதானம் கராமாத் அருள் சாந்தி உன்னுடைய நெருக்கத்தைப் பெற்ற அமரர்களின் ஸலவாத் உன்னுடைய முர்ஸலான நபிமார்கள் தூய்மையான இமாம்கள் உன்னுடைய ஸாலிஹான அடியார்கள் வானம் பூமியில் வசிப்பவர்கள்
مَنْ سَبَّحَ لَكَ يَارَبَّ الْعَالَمِيْنَ مِنَ اْلأَوَّلِيْنَ وَاْلآخِرِيْنَ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُوْلِكَ
உலகத்தாரைப் படைத்து பரிபாலிப்பவனே முன்னையோர்கள் பின்னையோர்கள் உன்னைத் துதித்த அளவு உன்னுடைய அடியானும் தூதருமாகிய
وَشَاهِدِكَ وَنَبِيِّكَ وَنَذِيْرِكَ وَأَمِيْنِكَ وَمَكِيْنِكَ
உன்னுடைய சாட்சியாகிய நபியாகிய எச்சரிக்கை செய்யக் கூடிய நம்பிக்கைக்குரிய உன்னால் நியமிக்கப்பட்ட
وَلَمْ أَحْضُرْ زَمَانَ رَسُوْلِكَ عَلَيْهِ وَآلِهِ السَّلاَمُ
உன்னுடைய தூதருடைய காலத்தில் நான் சமூகமளித்திருக்கவில்லை. அவர்கள் மீதும் அவர்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தி உண்டாவதாக!
اَللَّهُمَّ وَقَدْ زُرْتُهُ رَاغِبًا تَائِبًا مِّنْ سَيِّئِ عَمَلِيْ
(எனவே) இறiவா அவர்களை விரும்பியவர்களாகவும் தீய செயல்களில் இருந்து மீண்டவனாகவும் நான் அவர்களை ஸியாரத்துச் செய்கிறேன்.
وَمُسْتَغْفِرًا لَكَ مِنْ ذُنُوْبِيْ وَمُقِرًّا لَكَ بِهَا
உன்னிடத்தில் எனது பாவத்தில் இருந்து பிழைபொருக்கத் தேடியவனாகவும் எனது பாவத்தை ஏற்றுக் கொண்டவனாகவும்
وَأَنْتَ أَعْلَمُ بِهَا مِنِّيْ
அவைகளை என்னைவிட நீ மிக அறிந்தவன்.
وَمُتَوَجِّهًا إِلَيْكَ بِنَِبيِّكَ نَبِيِّ الرَّحْمَةِ صَلَوَاتُكَ عَلَيْهِ وَآلِهِ
அருளுடைய நபியாகிள உன்னுடைய நபியின் மூலம் உன்பக்கம் திரும்பியவனாக நபி மீதும் அவர்கள் குடும்பத்தினர் மீதும் உன்னுடைய ஸலவாத் உண்டாவதாக!
فَاجْعَلْنِيْ أَللَّهُمَّ بِمُحَمَّدٍ وَّأَهْلِ بَيْتِهِ عِنْدَكَ وَجِيْهًا فِي الدُّنْيَا وَاْلآخِرَةِ
இறiவா! முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலமாகவும் அவர்களின் குடும்பத்தின் பொருட்டாலும் இம்மை மறுமையில் உயர்வடையச் செய்வாயாக!
وَمِنَ الْمُقَرَّبِيْنَ يَا مُحَمَّدُ يَا رَسُوْلَ اللهِ
அல்லாஹ்வின் தூதரே! முஹம்மத் (ஸல்) அவர்களே! உனக்கு நெருக்கமானவர்களில் நின்றும் ஆக்கிவைப்பாயாக!
بِأَبِيْ أَنْتَ وَأُمِّيْ يَا نَبِيَّ اللهِ
அல்லாஹ்வின் நபியே! எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணம்.
يَاسَيِّدَ خَلْقِ اللهِ
அல்லாஹ்வின் படைப்புகளின் தலைவரே!
إِنِّيْ أَتَوَجَّهُ بِكَ إِلَى اللهِ رَبِّكَ وَرَبِّيْ
என்னுடையவும் உங்களுடையவும் ரப்பாகிய அல்லாஹ்வின் பால் உங்களின் பக்கம் முன்னோக்குகின்றேன்.
لِيَغْفِرَ لِيْ ذُنُوْبِيْ
என்னுடைய பாவங்களை மண்ணிப்பதற்காகவும்;
وَيَتَقَبَّلَ مِنِّيْ عَمَلِيْ
எனது அமல்களை ஏற்றுக் கொள்வதற்காகவும்
وَيَقْضِيَ لِيْ حَوَائِجِيْ
எனது தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும்
فَكُنْ لِيْ شَفِيْعًا عِنْدَ رَبِّكَ وَرَبِّيْ
என்னுடையவும் உங்களுடையவும் ரப்பிடத்தில் எனக்காக பரிந்துரைக்கக் கூடியவராக இருங்கள்.
فَنِعْمَ الْمَسْؤُوْلُ الْمَوْلَى رَبِّيْ
கேட்கப்படக்கூடியவர்களில் சிறந்தவராக என்னுடைய ரப்பாகிய எஜமான் ஆகிவிட்டான்.
وَنِعْمَ الشَّفِيْعُ أَنْتَ يَا مُحَمَّدُ
முஹம்மத் (ஸல்) அவர்களே! நீங்கள் பரிந்துரைக்கக் கூடியவர்களில் (ஷபாஅத்துச் செய்யக் கூடியவர்களில்) சிறந்தவராகிவிட்டீர்.
عَلَيْكَ وَعَلَى أَهْلِ بَيْتِكَ السَّلاَمُ
உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தி உண்டாவதாக!
اَلََّلهُمَّ وَأَوْجِبْ لِيْ مِنْكَ الْمَغْفِرَةَ وَالرَّحْمَةَ
இறiவா! உன்னிடத்தில் இருந்து எனக்கு அருளையும் பாவமன்னிப்பையும் கடமையாக்கி வைப்பாயாக!
وَالرِّزْقَ الْوَاسِعَ الطَّيِّبَ النَّافِعَ
பிரயோசனாமான மனமான விசாலமான உணவையும்
كَمَا أَوْجَبْتَ لِمَنْ أَتَى نَبِيَّكَ مُحَمَّدًا صَلَوَاتُكَ عَلَيْهِ وَآلِهِ
உன்னுடைய நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் குடும்பத்தவர்கள் மீதும் ஸலவாத் உண்டாவதாக! அவர்களிடத்தில் வந்தவர்களுக்கு எவ்வாறு கடமையாக்கி வைத்தாயோ
وَهُوَ حَيٌّ فَأَقَرَّ لَهُ بِذُنُوْبِهِ
நபி உயிரோடு இருக்கின்ற போது எவ்வாறு அவர்களிடத்தில் வந்து பாவங்களை ஏற்றுக் கொண்டு
وَاسْتَغْفَرَ لَهُ رَسُوْلُكَ عَلَيْهِ وَآلِهِ السَّلاَمُ
அதற்காக உன்னுடைய ரஸூலும் பாவமன்னிப்புத் தேடியபோது அவர்கள் மீதும் அவர்கள் குடும்பத்தவர்கள் மீதும் சாந்தி உண்டாவதாக!
فَغَفَرْتَ لَهُ بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِيْنَ
கிருபையாளர்களுக்கெல்லாம் மிகக் கிருihயாளனே அவர்களின் பாவத்தை உன்னுடைய கிருபையால் மன்னித்தாய்.
اَللَّهُمَّ وَقَدْ أمَّلْتُكَ وَرَجَوْتُكَ
இறiவா! உன்னை எதிர்பார்த்து உன்னை மேலெண்ணம் வைத்தேன்.
وَقَدْ قُمْتَ بَيْنَ يَدَيْكَ
உனக்கு மத்தியில் நான் எழுந்து நிற்கின்றேன்.
وَرَغِبْتَ إِلَيْكَ عَمَّنْ سِوَاكَ
உன்னைத் தவிர மற்றையவைகளை வெறுத்தவனாக
وَقَدْ أَمَّلْتُ جَزِيْلَ ثَوَابِكَ
உன்னுடைய உயர்வான கூலியை மேலெண்ணம் வைத்தவனாக
وَإِنِّيْ لَمُقِرٌّ غَيْرُ مُنْكِرٍ
உன்னை நிராகரிக்காது ஏற்றுக் கொண்டவனாக
وَتَائِبٌ إِلَيْكَ مِمَّا إقْتَرَفْتُ
நான் செய்த பாவங்களுக்காக உன்னளவில் மீண்டவனாக
وَعَائِذٌ بِكَ فِيْ هَذَا الْمَقَامِ
இந்த இடத்தில் இருந்து உன்பக்கம் மீண்டவனாக
مِمَّا قَدَّمْتُ مِنَ اْلأَعْمَالِ الَّتِيْ تَقَدَّمْتُ إِلَيَّ فِيْهَا
எவ்வாறான விடயங்களை என்பக்கம் முற்படுத்தினாயோ அவ்விடயங்களை நான் முற்படுத்தியவனாக
وَنَهَيْتَنِيْ عَنْهَا
எவைகளை விட்டும் நீ விலக்கினாயோ
وَأَوْعَدْتَ عَلَيْهَا الْعِقَابَ
எவைகளைச் செய்தால் அவைகளுக்கு உனது தண்டனையை எச்சரித்தாயோ
وَأَعُوْذُ بِكَرَمِ وَجْهِكَ أَنْ تُقِيْمَنِيْ مَقَامَ الْخِزْيِ وَالذُّلِّ يَوْمَ تَهْتِكُ فِيْهِ اْلأَسْتَارُ
திரைகிளிந்திடும் நாளில் இளிவு பின்னடைவுகள் ஏற்படாமல் உன்னுடைய சங்கையின் மூலம் உன்னிடத்தில் நான் பாதுகாவல் தேடுகின்றேன்.
وَتَبْدُوَ فِيْهِ اْلأَسْرَارُ وَالْفَضَائِحُ
அந்த நாளில் இரகசியங்கள் மானக்கேடான விடயங்கள் வெளியாகும்.
وَتَرْعَدُ فِيْهِ الْفَرَائِضُ
உள்ளங்கள் நடுங்கக் கூடிய அந்த நாளில்
يَوْمَ الْحَسْرَةِ وَالنَّدَامَةِ
கைசேதம் துன்பத்தை உடைய நாளில்
يَوْمَ اْلإِفْكَةِ يَوْمَ اْلآزِفَةِ
கற்பனை பொய்யாகும் நாள் சமீபத்தில் வரும் நாளில்
يَوْمَ التَّغَابُنِ يَوْمَ الْفَصْلِ يَوْمَ الْجَزَاء
அம்பலம் வரும் நாள் தீர்வு வழங்கும் நாள் கூலி வழங்கப்படும் நாள்
يَوْمًا كَانَ مِقْدَارُهُ خَمْسِيْنَ أَلْفِ سَنَةٍ
50,000 வருடம் அளவையுடைய நாள்
يَوْمَ النَّفْخَةِ يَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةُ
ஸூர் ஊதப்படும் நாள், பலமாக அதிர்ச்சியுறும் நாள்
تَتْبَعُهَا الرَّادِفَةُ
பூகம்ப அதிர்ச்சி அதனைத் தொடரும்.
يَوْمَ النَّشْرِ يَوْمَ الْعَرَضِ
பரத்தப்படும் நாள் நன்மை தீமைகளைக் காட்டப்படும் நாள்
يَوْمَ يَقُوْمُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِيْنَ
அகிலத்தாரைப் படைத்து பரிபாலிக்கக் கூடியவனுக்காக மனிதர்கள் எழுந்து நிற்கும் நாள்
يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيْهِ وَأُمِّهِ وَأَبِيْهِ وَصَاحِبَتِهِ وَبَنِيْهِ
பிள்ளைகள் மனைவி தந்தை தாய் சகோதரனை விட்டும் மனிதன் விரண்டோடும் நாள்
يَوْمَ تَشَقَّقُ اْلأَرْضُ وَأَكْنَافُ السَّمَاءِ
வானம் பூமிகளைப் பிழக்கப்படும் நாள்
يَوْمَ تَأْتِيْ كُلُّ نَفْسٍ تُجَادِلُ عَنْ نَفْسِهَا
ஒவ்வொரு ஆத்மாவும் தன்னைப்பற்றி பேசவரும் நாள்
يَوْمَ يَرُدُّوْنَ إِلَى اللهِ فَيُنَبِّئْهُمْ بِمَا عَمِلُوْا
அல்லாஹ்வின் பக்கம் மீட்டப்பட்டு அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அறிவிக்கப்படும் நாள்
يَوْمَ لاَ يُغْنِيْ مَوْلىً عَنْ مَولًى شَيْئًا وَّلاَ هُمْ يُنْصَرُوْنَ إِلاَّ مَنْ رَّحِمَ اللهُ إِنَّهُ هُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ
அல்லாஹ் அருள் புரிந்தவர்களைத் தவிர ஒரு நண்பன் மற்றைய நண்பனுக்கு தேவைகளை நிறைவேற்றவோ உதவி செய்யவோ முடியாத நாள் நிச்சயமாக அவன் கண்ணியமானவனும் கிருபை உள்ளவனுமாக இருக்கின்றான்.
يَوْمَ يُرَدُّوْنَ إِلَى عَالَمِ الْغيْبِ وَالشَّهَادَةِ
மறைவானவைகள் நேர்முகமானவைகளை அறிந்தவனின் பக்கம் மீட்டப் படுகின்ற நாள்
يَوْمَ يُرَدُّوْنَ إِلَى اللهِ مَوْليَهُمُ الْحَقِّ
அவர்களின் உண்மையான எஜமானனாகிய அல்லாஹ்வின் பக்கம் மீட்டப்படும் நாள்
يَوْمَ يُخْرَجُوْنَ مِنَ اْلأَجْدَاثِ سِرَاعًا
மன்னறையிலிருந்து அவசரமாக அவர்கள் வெளியாகும் நாள்
كَأَنَّهُمْ جَرَادٌ مُّنْتَشِرٌ
பரத்தப்பட்ட வெட்டுக்கிளிகளைப் போன்று
مُهْطِعِيْنَ الدَّاعِ إِلَى اللهِ
அல்லாஹ் அளவில் அழைக்கப்பட்டு விரைந்தவர்களாக
يَوْمَ الْوَاقِعَةِ
நிகழ்வுகள் நடக்கும் நாளில்
يَوْمَ تَرُجُّ اْلأَرْضُ رَجَّا
பூமி பிளந்து பூகம்பம் வரும் நாளில்
يَوْمَ تَكُوْنُ السَّمَاءُ كَالْمُهْلِ
பழுக்கக் காய்ச்சப்பட்டு உருக்கிய செம்பைப் போன்று வானம் ஆகிவிடும் நாளில்
وَتَكُوْنُ الْجِبَالُ كَالْعِهْنِ
பரந்த பஞ்சைப் போன்று மலைகள் ஆகிவிடும் நாளில்
وَلاَ يُسْأَلُ حَمِيْمٌ حَمِيْمًا
ஒரு நண்பன் மற்றைய நண்பனைப் பற்றி வினவமாட்டான்.
يَوْمَ الشَّاهِدِ وَالْمَشْهُوْدِ
சாட்சி சொல்லக் கூடியதும், சாட்சி சொல்லப்படக் கூடிய நாளிலேயும்
يَوْمَ تَكُوْنُ الْمَلاَئِكَةُ صَفًّا صَفًّا
மலக்குகள் அணி அணியாக வரும் நாளில்
أَللَّهُمَّ ارْحَمْ مَوْقِفِيْ فِيْ ذَلِكَ الْيَوْمِ بِمَوْقِفِيْ فِيْ هَذَا الْيَوْمِ
இந்த நாளின் நிலைப்பாட்டின் மூலம் அந்த நாளின் நிலைப்பாட்டுக்கு நீ அருள் புரிவாயாக!
وَلاَ تُخْزِنِيْ فِيْ ذَلِكَ الْمَوْقِفِ بِمَا جَنَيْتُ عَلَى نَفْسِيْ
எனது ஆத்மாவுக்கு நான் இழைத்த குற்றத்திற்காக அந்த நாளின் நிலைப்பாட்டில் என்னை இழிவு படுத்திவிடாதே!
وَاجْعَلْ يَا رَبِّ فِيْ ذَلِكَ الْيَوْمِ مَعَ أَوْلِيَاءِكَ مُنْطَلَقِيْ
என்னை உன்னுடைய நேசர்களோடு அந்த நாளில் என் எஜமானனே நீ ஆக்கியருள்வாயாக!
وَفِيْ زُمْرَةِ مُحَمَّدٍ وَّأَهْلِ بَيْتِهِ عَلَيْهِمِ السَّلاَمُ مَحْشَرِيْ
என்னை எழுப்பும் போது முஹம்மது (ஸல்) அவர்களோடும் அவர்களுடைய குடும்பத்தினராகிய அஹ்லுல் பைத்துக்களோடும் எழுப்புவாயாக!
وَاجْعَلْ حَوْضَهُ مَوْرِدِيْ
அவர்களின் நீர்த்தடாகத்திலிருந்து (ஹவ்லுல் கவ்ஸர்) என்னுடைய தாகத்தைத் தீர்த்து வைப்பாயாக!
وَفِيْ غُرِّ الْكِرَامِ مَصْدَرِيْ
என்னுடைய அடிப்படையை நன்மக்களோடு ஆக்கிவைப்பாயாக!
وَأَعْطِنِيْ كِتَابِيء بِيَمِيْنِيْ
என்னுடைய பட்டோலையை என்னுடைய வலது கையில் தந்து
حَتَّى أَفُوْزَ بِحَسَنَاتِيْ
என்னுடைய நன்மையின் மூலம் என்னை வெற்றிபெறச் செய்வாயாக!
وَتَبْيَضَّ بِهِ وَجْهِيْ
அதன் மூலம் என்னுடைய முகத்தை வெள்ளையாக்கி வைப்பாயாக!
وَتُيَسِّرَ بِهِ حِسَابِيْ
என்னுடைய கேள்வி கணக்கை இலேசாக்கி வைப்பாயாக!
وَتُرَجِّحَ بِهِ مِيْزَانِيْ
என்னுடைய நன்மைத் தராசை கனமாக்கி வைப்பாயாக
وَأَمْضِيَ مَعَ الْفَائِزِيْنَ مِنْ عِبَادِكَ الصَّالِحِيْنَ إِلَى رِضْوَانِكَ وَجِنَانِكَ إِلَهَ الْعَالَمِيْنَ
உன்னுடைய ஸாலிஹான நல்லடியார்களில் நின்றும் வெற்றியாளர்களுடன் என்னைச் உலகத்தாரின் இறைவனே! உனது பொருத்தத்தின் பாலும் சொர்க்கத்தின் பாலும் செலுத்துவாயாக!
أَلَّلهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ أَنْ تَفْضَحَنِيْ فِيْ ذَلِكَ الْيَوْمِ بَيْنَ يَدَيِ الْخَلاَئِقِ بِجَرِيْرَتِيْ
இறiவா! அந்த நாளில் எனது குற்றத்தால் உன்னுடைய படைப்புகளுக்கு மத்தியில் என்னை அவமானப்படுத்துவதிலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன்.
أَوْ أَنْ أَلْقَى الْخِزْيَ وَالنَّدَامَةَ بِخَطِيْئَتِيْ
என்னுடைய குற்றத்தால் இழிவையும் கைசேதத்தையும் சந்திப்பதை விட்டும்
أَوْ أَنْ تَظْهَرَ فِيْهِ سَيِّئَاتِيْ عَلَى حَسَنَاتِيْ
எனது நன்மையை விட எனது பாவத்தை வெளிப்படுத்துவதை விட்டும்
أَوْ أَنْ تُنَوِّهَ بَيْنَ الْخَلاَئِقِ بِاسْمِيْ
என்னுடைய பெயர் படைப்புகளுக்கு மத்தியில் இழிவு படுத்தப்படுவதை விட்டும்
يَا كَرِيْمُ يَاكَرِيْمُ
சங்கைக்குரியவனே! சங்கைக்குரியவனே!
اَلْعَفْوَ اَلْعَفْوَ
மன்னிப்பைக் கோருகிறேன். மன்னிப்பைக் கோருகிறேன்.
اَلسَّتْرَ اَلسَّتْرَ
மறைத்தலைக் கோருகிறேன். மறைத்தலைக் கோருகிறேன்.
أَللَّهُمَّ وَأَعُوْذُ بِكَ مِنْ أَنْ يَّكُوْنَ فِيْ ذَلِكَ الْيَوْمِ فِيْ مَوَاقِفِ اْلأَشْرَارِ مَوْقِفِيْ
இறiவா! அந்த நாளில் எனது நிலைப்பாடு தீயவர்களின் நிலைப்பாடாக மாறுவதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
أَوْ فِيْ مَقَامِ اْلأَشْقِيَاءِ مَقَامِيْ
அல்லது என்னுடைய இடம் கெட்டவர்களின் இடமாக இருப்பதை விட்டும்
وَإِذَا مَيَّزْتَ بَيْنَ خَلْقِكَ
உன்னுடைய படைப்புகளைப் பிரிக்கும் போதும்
فَسُقْتَ كُلاًّ بِأَعْمَالِهِمْ زُمَرًا إِلَى مَنَازِلِهِمْ
ஒவ்வொரு வகுப்பினரையும் அவர்களின் செயலால் அவர்களின் இடத்திற்கு இழுக்கும் போது
فَسُقْنِيْ بِرَحْمَتِكَ فِيْ عِبَادِكَ الصَّالِحِيْنَ
உனது அருளின் மூலம் எனது நல்லடியார்களின் பக்கம் என்னை இழுத்துச் செல்வாயாக!
وَفِيْ زُمْرَةِ أَوْلِيَاءِكَ الْمُتَّقِيْنَ إِلَى جَنَّاتِكَ يَا رَبَّ الْعَالَمِيْنَ
உலகத்தாரைப்படைத்து பரிபாலிக்கக் கூடியவனே உனது சுவனத்தின் பக்கம் இறைவனைப் பயந்த இறைநேசர்களுடன் என்னை இட்டுச் செல்வாயாக!
اَلسَّلاَمُ عَلَيْكَ يَا رَسُوْلَ اللهِ
அல்லாஹ்வின் தூதரே உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!
اَلسَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا الْبَشِيْرُ النَّذِيْرُ
அச்சம் ஊட்டி நண்மாராயம் கூறுபவரே உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!
اَلسَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا السِّرَاجُ الْمُنِيْرُ
ஒழி விளக்கே உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!
اَلسَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا السَّفِيْرُ بَيْنَ يَدَيِ اللهِ وَبَيْنَ خَلْقِكَ
அவனுடைய படைப்புக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் தூதுவரே உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!
أَشْهَدُ يَا رَسُوْلَ اللهِ أَنَّكَ كُنْتَ نُوْرًا فِي اْلأَصْلاَبِ الشَّامِخَةِ وَاْلأَرْحَامِ الْمُطَهَّرَةِ
அல்லாஹ்வின் தூதரே கலக்கம் இல்லாத ஒழியாகவும் சுத்திகரிக்கப் பட்ட கற்பத்திலும் இருந்தீர்கள் என நான் சாட்சி சொல்கிறேன்.
لَمْ تُنَجِّسْكَ الْجَاهِلِيَّةُ بِأَنْجَاسِهَا
அதன் (ஜாஹிலிய்யத்) அறியாமை அதன் அழுக்குகளால் உங்களை அழுக்காக்கிவிடவில்லை.
وَلَمْ تُلَبِّسْكَ مِنْ مُدْلَهِمَّاتِ ثِيَابِهَا
அதன் அசூசியான ஆடைகளை உங்களுக்கு அணிவிக்கவில்லை.
وَأَشْهَدُ يَا رَسُوْلَ اللهِ أَنِّيْ مُؤْمِنٌ بِكَ وَاْلأَئِمَّةِ مِنْ أَهْلِ بَيْتِكَ
அல்லாஹ்வின் தூதரே உங்களையும் உங்கள் குடும்பத்தினராகிய அஹ்லுல் பைத்தினரையும் நான் விசுவாசித்தவன் என சாட்சி பகருகின்றேன்.
مُوْقِنٌ بِجَمِيْعِ مَا أَتَيْتَ بِهِ رَاضٍ مُؤْمِنٌ
நீங்கள் கொண்டு வந்த அனைத்தையும் பொருந்திக் கொண்டு விசுவாசித்தவன் என உறுதி பூண்டேன்.

وَأَشْهَدُ أَنَّ اْلاَئِمَّةَ مِنْ أَهْلِ بَيْتِكَ أَعْلاَمِ الْهُدَى
உங்கள் அஹ்லுல் பைத்துக்களில் வந்த இமாம்களை நேர்வழியின் அடையாளங்கள் என சாட்சி கூறுகின்றேன்.
وَالْعُرْوَةِ الْوُثْقَى
பலமான தொடர்பு
وَالْحُجَّةِ عَلَى أَهْلِ الدُّنْيَا
பூமியிலுள்ளவர்களுக்கு அத்தாட்சி
اَللَّهُمَّ وَلاَ تَجْعَلْهُ آخِرَ الْعَهْدِ مِنْ زِيَارَةِ نَبِيِّكَ عَلَيْهِ وَآلِهِ السَّلاَمُ
இறiவா! உன்னுடைய நபியை ஸியாரத்துச் செய்வதில் இறுதிச் சந்திப்பாக ஆக்கிவிடாதே!
وَاِنْ تَوَفَّيْتَنِيْ فَإِنِّيْ أَشْهَدُ فِيْ مَمَاتِيْ عَلَى مَا أَشْهَدُ عَلَيْهِ فِيْ حَيَاتِيْ
நான் இந்த உலகத்தில் வாழும் போது எதை சாட்சி பகர்ந்தேனோ அதையே எனது மரணத்தின் போதும் சாட்சி சொல்லியவனாக என்னை மரணிக்கச் செய்வாயாக!
إِنَّكَ أَنْتَ اللهُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ وَحْدَكَ لاَ شَرِيْكَ لَكَ
நிச்சயமாக நீயே அல்லாஹ் உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ தனித்தவன் உனக்கு இணையில்லை என சாட்சி கூறியவனாக
وَأَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُوْلُكَ
நிச்சயம் முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியானும் தூதருமாயிருக்கும் என்றும்
وَأَنَّ اْلأَئِمَّةَ مِنْ أَهْلِ بَيْتِهِ أَوْلِيَاءِكَ وَأَنْصَارِكَ
அவர்களின் அஹ்லுல் பைத்தில் வந்த இமாம்கள் அவனுடைய நேசர்களும் அவனுடைய உதவியாளருமாயிருக்கும் என்றும்
وَحُجَجُكَ عَلَى خَلْقِكَ
உன்னுடைய படைப்புகளின் அத்தாட்சியாக இருக்கும் என்றும்
وَخُلَفَاؤُكَ فِيْ عِبَادِكَ
உன்னுடைய அடியார்களின் உனது பிரதிநிதியாக இருக்கும் என்றும்
وَخُزَّانُ عِلْمِكَ
உன்னுடைய அறிவுப் பொக்கிஷமாயிருக்கும் என்றும்
وَحَفَظَةُ سِرِّكَ
உன்னுடைய இரகசியத்தின் பாதுகாவலர் என்றும்
وَتَرَاجُمَةُ وَحْيِكَ
உன்னுடைய வஹியின் மொழிபெயர்ப்பாளராக இருக்கும் என்றும் சான்று பகருகின்றேன்.
أَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَّآلِ مُحَمَّدٍ
நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவரகள் குடும்பத்தவர்கள் மீதும் ஸலவாத்துச் சொல்வாயாக!
وَبَلِّغْ رُوْحَ نَبِيِّكَ مُحَمَّدٍ وَّآلِهِ فِيْ سَاعَتِيْ هَذِهِ وَفِيْ كُلِّ سَاعَةٍ تَحِيَّةً مِّنِّيْ وَسَلاَمًا
உன்னுடைய நபி முஹம்மத் (ஸல்) அவர்களுடையவும் அவர்களுடைய குடும்பத்துடையவும் ரூஹின் மீது எந்த நேரத்திலும் ஏனைய அனைத்து நேரங்களிலும் என்னுடைய ஸலாத்தையும் காணிக்கையையும் எத்திவைப்பாயாக!
وَالسَّلاَمً عَلَيْكَ يَا رَسُوْلَ اللهِ وَرَحْمَةُ اللهِ وَبَرَكاَتُهُ
அல்லாஹ்வின் தூதரே உங்கள் மீது சாந்தியும் அவனுடைய அருளும் அவனுடைய பரகத்தும் உண்டாவதாக!
وَلاَ جَعَلَهُ اللهُ آخِرَ تَسْلِيْمِيْ عَلَيْكَ
உங்கள் மீது சொல்லக் கூடிய இறுதி ஸலாமாக அல்லாஹ் ஆக்காமல் இருப்பானாக!

!

செவ்வாய், 22 மார்ச், 2011

நாவின் முக்கியத்துவமும் அதைப் பே ணலும்

*மனித நாவின் பிரயோகங்கள் பலவாறு காணப்படுகின்றது. அந்த வகையில் நாவை இரு விதத்தில் பயன்படுத்த முடியும்.
01 . நனமையான விதம் (வழிமுறை)
02 . தீமையான விதம் (வழிமுறை)
*நன்மையான வழிமுறைகளை நோக்கின் அவை வருமாறு : -
1 . இறைவனை ஞாபகித்தல்
2 . நபியவர்களையும் அவர்களது குடும்பத்தார்களையும் ஞாபகித்து அவர்களது சிறப்புக்களையும் எடுத்துக் கூறுதல் .
3 . திக்ரே தஸ்பீகாத்தே ஹஸ்ரத் ஸஹ்ரா (அலை) எனப்படும் திக்ருகளை ஓதுதல்.
4 . பலவகைப்பட்ட அறிவுகளையும் மனிதர்களுக்குப் புகட்டுதல் .
*தீமையான வழிமுறைகளளை நோக்கின் : -
1 . பொய் சொல்லுதல்
2 . அவதூறு கூறுதல்
*நாவானது ஒரு மனிதனின் நிலையை அவனது இடத்தை விட்டும் தாழ்த்தவோ அல்லது உயர்த்தவோ காரணமாய் அமையும் .
*நாவைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமையினாலேயே அதிகமான பிரச்சினைகள் தோன்றுகின்றன .
*மனிதனின் நாவு ஒரு மிருகம் போன்றது . அதனை கூட்டக்குள் காத்து வைக்காவிடின் அது தன் உடைமையாளனுக்கே முதலில் ஊறு விளைவிக்கும் .

ஞாயிறு, 7 நவம்பர், 2010

இமாம் ஜவாத் (அலை) அவர்களின் ஸஹாதத்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்
தில் ஹஜ் 30ல் , 1ல் இமாம் ஜவாத் (அலை) அவர்கள் ஸஹீதானார்கள் என்று றிவாயத்துக்கள் கூறுகின்றன. இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு , ஸஹீதாக்கப்பட்டார்கள் பின் அவர்களை ஒருகட்டடிடத்தின் மேல் அந்தசங்கையான இமாமின் உடல் வீசப்பட்டது பின் பறவைகள் அந்த சங்கை மிக்க உடலில் வெயிலின் சூடு சுட்டு விடக்கூடாது என்பதற்காக அவ்வாரே இமாமின் உடலிற்கு மேலே மேகம் போன்று வந்து மறைத்துக் கொண்டன. இந்த இமாமவர்கள்தான் சிறுவயதிலேயே இமாமத்தை அடைந்தார்கள் . அவர்களின் காலத்தில் வாழ்ந்த சிலர் இவர் சிறியவர்தானே இவர் என்ன இமாமாக இறுப்பது என்று ஏலனம் செய்வதற்காக இமாமவர்களிடம் சில பல கேள்விகளைக் கேட்க இமாமவர்களளோ அந்தக் கேள்வியைத் தொட்டு சுமார் ஐம்பது கேள்விகளைக்எ கேட்டார்கள் பின் கேள்வி கேட்டவர்களோ அவ்வாறு அசந்து போய்விட்டார்கள் . இமாமர்களின் ஓர் ஆச்சரியமான சம்பவம் இவர்களின் தந்தை இமாம் ரிழா (அலை) அவர்களின் தோழர் ஒருவர் இமாம் ரிழா அவர்களின் ஸஹாத்தத்திற்கு பின் சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் ஒரு வருடம் சிறையில் இருந்தார் . அந்த ஒரு வருடத்தின் பின்தான் சிறையில் இருந்தவருக்கு ஞாபகம் வந்தது இது இமாம் ஜவாத் (அலை) அவர்களின் இமாமத்திற்குறிய காலம் அல்லவா நான் ஏன் இதை மறந்துவிட்டேன் என்று அந்த நொடியே இமாம் ஜவாத் (அலை) அவர்களிடம் வஸீலாத் தேடி அழைத்தார் அப்போது உடனடியாக இமாம் ஜவாத் ( அலை) அவர்கள் அங்கு உதயமானார்கள் அப்போது இமாமவர்களிடம் சிறையில் இருந்த மனிதர் கேட்டார் இமாமவர்களே! நான் சுமார் ஒரு வருடமாக இந்த சிறையில் இருந்தேன் ஏன் நீங்கள் என்னை விடுவிக்க வரவில்லை என்று வினவினார் . அதற்கு அருமை இமாமவர்கள் கூறினார்கள் இன்றுதான் உங்களுக்கு என் ஞாபகம் வந்தது . அதனால்தான் . பார்த்தீர்களா எங்களின் இமாம்கள் எந்தளவிற்கு விரைவாக அவர்களை நேசிகக்கின்றவர்கள் உதவிக்கு அழைக்கின்றார்கள்போது உதவ வறுகின்றார்கள் என்று இமாம்களை உண்மைக்குன்மையாக நேசிப்போம் கஷ்ட நஷ்டங்கள் வறும்போது அவர்களை இறைவனிடத்தில் முன்னிறுத்தி உதவி தேடுவோம் நிச்சயமாக அவர்கள் உதவிக்கு வறுவார்கள் .
உங்களின் தூய்மையான துஆக்களில் எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்

புதன், 28 ஏப்ரல், 2010

பாத்திமா ஸஹ்ரா (அலை) பற்றியது.

பாத்திமா ஸஹ்ரா (அலை) பற்றியது.


இவர்கள் ஜமாதுல் அவ்வல் 13ல் ஷஹீதானார்கள்

( இது நபியவர்கள் மரணித்து 75 நாற்களின் பின் மரணித்தார்கள்) என்ற ரிவாயத்தின் படி ஆகும.



நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'எனது மகளிற்கு நான் பாத்திமா என்ற பெயர் வைத்ததன் காரணம் பாத்திமாவையும் அவர்கள் மீது அன்பு வைத்தவர்களையும் இறைவன் நரக நெருப்பை விட்டும் தூரமாக்கியுள்ளான் என்பதற்காகவேயாகும்'.


(மீசானுல் ஹிக்மா:472)


இமாம் ஸாதிக் (அலை) அறிவிக்கிறார்கள்: 'பாத்திமா (அலை) இறைவனிடத்தில் 9 பெயர்களைக் கொண்டுள்ளார்கள். அவை : பாத்திமா , சித்தீகா, ,முபாரகா, தாஹிரா, சகிய்யா, ரழிய்யா, மர்ழிய்யா, முஹத்ததா , ஸஹ்ரா என்பவைகளாகும். (மீசானுல் ஹிக்மா:473)


அம்மாரா அறிவிக்கிறார்: ' இமாம் ஸாதிக் (அலை) அவர்களிடமிருந்து கேட்டேன். ஏன் பாத்திமா ஸஹ்ரா (அலை) அவர்களை 'பிரகாசிப்பவர்' என்று பெயரிட்டுள்ளீர்கள்? ' இமாமவர்கள் கூறினார்கள்

'பாத்திமா (அலை) அவர்கள் இறைவனைத் தொழும் வேளை , அவர்களில் இருந்து வெளிப்பட்ட ஒளியானது வானிலுள்ளவர்களுக்கு ஒளி கொடுத்தது. அது எது போன்றதெனில் வானிலுள்ள நடசத்திரங்கள் பூமியிலுள்ளவர்களுக்கு ஒளி கொடுப்பதைப் போன்றாகும். இதனாலேயே அவ்வாறு பெயரிடப் பட்டுள்ளார்கள் '. (மீசானுல் ஹிக்மா :474)


இவர்கள் தனது தந்தையான நபியவர்களுக்கு மகளாக மட்டுமல்லாது தாயாகவும் இருந்து பணி புரிந்தார்கள்.




இவர்களை நாமும் முன்மாதிரியாகக் கொண்டு எமது பெண்களுக்கும் அன்னாரின் வாழ்வியல் வழிகாட்டல்களைக் கற்றுக் கொடுத்து அதன் படி செயல் புரிந்து ஈருலகிலும் பயனடைவோமாக!