புதன், 28 ஏப்ரல், 2010

பாத்திமா ஸஹ்ரா (அலை) பற்றியது.

பாத்திமா ஸஹ்ரா (அலை) பற்றியது.


இவர்கள் ஜமாதுல் அவ்வல் 13ல் ஷஹீதானார்கள்

( இது நபியவர்கள் மரணித்து 75 நாற்களின் பின் மரணித்தார்கள்) என்ற ரிவாயத்தின் படி ஆகும.



நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'எனது மகளிற்கு நான் பாத்திமா என்ற பெயர் வைத்ததன் காரணம் பாத்திமாவையும் அவர்கள் மீது அன்பு வைத்தவர்களையும் இறைவன் நரக நெருப்பை விட்டும் தூரமாக்கியுள்ளான் என்பதற்காகவேயாகும்'.


(மீசானுல் ஹிக்மா:472)


இமாம் ஸாதிக் (அலை) அறிவிக்கிறார்கள்: 'பாத்திமா (அலை) இறைவனிடத்தில் 9 பெயர்களைக் கொண்டுள்ளார்கள். அவை : பாத்திமா , சித்தீகா, ,முபாரகா, தாஹிரா, சகிய்யா, ரழிய்யா, மர்ழிய்யா, முஹத்ததா , ஸஹ்ரா என்பவைகளாகும். (மீசானுல் ஹிக்மா:473)


அம்மாரா அறிவிக்கிறார்: ' இமாம் ஸாதிக் (அலை) அவர்களிடமிருந்து கேட்டேன். ஏன் பாத்திமா ஸஹ்ரா (அலை) அவர்களை 'பிரகாசிப்பவர்' என்று பெயரிட்டுள்ளீர்கள்? ' இமாமவர்கள் கூறினார்கள்

'பாத்திமா (அலை) அவர்கள் இறைவனைத் தொழும் வேளை , அவர்களில் இருந்து வெளிப்பட்ட ஒளியானது வானிலுள்ளவர்களுக்கு ஒளி கொடுத்தது. அது எது போன்றதெனில் வானிலுள்ள நடசத்திரங்கள் பூமியிலுள்ளவர்களுக்கு ஒளி கொடுப்பதைப் போன்றாகும். இதனாலேயே அவ்வாறு பெயரிடப் பட்டுள்ளார்கள் '. (மீசானுல் ஹிக்மா :474)


இவர்கள் தனது தந்தையான நபியவர்களுக்கு மகளாக மட்டுமல்லாது தாயாகவும் இருந்து பணி புரிந்தார்கள்.




இவர்களை நாமும் முன்மாதிரியாகக் கொண்டு எமது பெண்களுக்கும் அன்னாரின் வாழ்வியல் வழிகாட்டல்களைக் கற்றுக் கொடுத்து அதன் படி செயல் புரிந்து ஈருலகிலும் பயனடைவோமாக!