வெள்ளி, 27 நவம்பர், 2009

பெருநாள் வாழ்த்து

புனித ஹஜ்ஜுக் பொருநாள் வாழ்த்துக்களை அனைத்துலக முஸ்லிம்களுக்கும் தெரிவிக்கின்றோம்.

செவ்வாய், 24 நவம்பர், 2009

இமாம்களின் ஷஹாதத்தின வெளியீடு

துல் ஹஜ் 07 இமாம் பாகிர் (அலை) அவர்களின் ஸஹாதத் தினமாகும். இந்த வருடம் அவர்களது ஷஹாதத் தினம் துஆ தவஸ்ஸுல் ஓதப்படுகின்ற செவ்வாய் பிற்பகல் புதன் இரவாக இருப்பது சிறப்பம்சமாகும். எனவே இத்தினத்தில் துஆ தவஸ்ஸுலை ஓதுவதுடன் அஹ்லுல் பைத்தினரின் ஸபாஅத் கிடைப்பதற்காக பிரார்த்திப்போமாக.

வியாழன், 19 நவம்பர், 2009

ஹஸ்ரத் அலி (அலை) அவர்கள் குமைல் இப்னு ஸியாத் (ரஹ்) அவர்களுக்கு கற்றுக் கொடுத்த துஆ குமைல்

ஹஸ்ரத் அலி (அலை) அவர்கள் குமைல் இப்னு ஸியாத் (ரஹ்) அவர்களுக்கு கற்றுக் கொடுத்த துஆ குமைல்


01. அல்லாஹ்வேஇ எல்லாப் பொருட்களையும் சூழ்ந்துள்ள உனது பேரருளினைக் கொண்டு நான் உன்னிடம் இறைஞ்சுகின்றேன்.


02. அனைத்தையும் அடக்கியாளும் உனது வல்லமையைக் கொண்டு அவை உனது வல்லமைக்குப் பணிந்துவிட்டன.
03. யாவற்றையும் மிகைத்துவிட்ட உனது அதிகாரத்தைக் கொண்டும் தன்னிகரற்ற உனது கண்ணியத்தைக் கொண்டும்இ

04. யாவற்றையும் நிறப்பமாக்கியிருக்கும் உனது மகாத்மியத்தைக் கொண்டும்இ

05. அனைத்தையும் மிகைத்துவிட்ட உனது அரசாட்சியைக் கொண்டும்இ எல்லாமே அழிந்தபின் எஞ்சியிருக்கும் உனது திருமுகத்தைக் கொண்டும்
06. எல்லாப் பொருட்களினதும் அடிப்படையில் நிரம்பிவிட்ட உனது அழகு திருநாமங்களைக் கொண்டும்இ அண்ட சராசரங்கள் அனைத்தையும் அவதானிக்கும் உனது பேரருளினைக் கொண்டும்இ

07. சகலதையும் பிரகாசமடையச் செய்த உனது திருமுகப் பேரருளினைக் கொண்டும் உன்னிடம் கெஞ்சிக் கேட்கின்றேன்.
08. ஒளிமயமானவனேஇ தூய்மையானவனேஇ அனைத்திற்கும் ஆதியானவனேஇ அந்தமில்லாதவனேஇ
09. அல்லாஹ்வேஇ உனது பாதுகாவலை தகர்த்தெரியக்கூடிய எனது குற்றம் குறைகளை மன்னித்தருள்வாயாக.
10. வேதனைகளை இறக்கி வைக்கும் எனது பாவங்களை பொறுத்துக் கொள்வாயாக.
11. அருட்கொடைகளை அழித்துவிடும் எனது பிழைகளை பொறுத்தருள்வாயாக
12. பிரார்த்தனைகளை தடுத்துவிடும் எனது பாவங்களை பொறுத்தருள்வாயாக.
13. எதிர்பார்ப்பை துண்டித்துவிடும் எனது பாவங்களை பொறுத்தருள்வாயாக.
14. சோதனைகளை இறக்கிவிடும் எனது குற்றங்களை மன்னிப்பாயாக.
15. நான் செய்த ஒவ்வொரு பிழையையும் பொறுத்து எனது எல்லாப் பாவங்களையும் மன்னிப்பாயாக.
16. அல்லாஹ்வேஇ உன்னை தியானிப்பதன் மூலமே நான் உன்னை நெருங்குகின்றேன். உன்னைக்கொண்டே உன்னிடம் சிபார்சு தேடுகின்றேன்.
17. உனது தயாளத்தைக் கொண்டே உனது நெருக்கத்தையும்இ உனக்கு நன்றி செலுத்தும் நல்லெண்ணத்தையும்
18. உன்னைத் தியானிக்கும் உணர்வையும் வேண்டி நிற்கின்றேன்.
19.உன்னை அடிபணிந்து தொழுது உன்னிடம் கெஞ்சிக் கேட்கின்றேன்: என்னை மன்னித்து அருள்பரிவாயாக.
20.உனது பங்களிப்பை தன்னிறைவோடு பொருந்திக்கொண்டவனாக என்னை நீ ஆக்குவாயாக. எல்லாவற்றிலும் என்னை நீ பணிவடக்கம் உடையவனாக ஆக்குவாயாக.
21.நெருக்கடி வேளையில் உன்னிடம் அதிக தேவை உள்ளவனாக இரந்து கேட்கின்றேன்.
22.உன்னிடத்தில் உள்ளவற்றின் மீது தேவை வலுப்பமாகிவிட்டது.
23.அல்லாஹ்வேஇ உனது அரசாட்சி மகத்துவம் அடைந்துவிட்டது. உனது அந்தஸ்து உயர்ந்துவிட்டது. உனது திட்டம் மறைந்து உனது சட்டம் வெளியகியுள்ளது.
24.உனது அதிகாரம் மிகைத்து உனது சக்தி நிலைத்துவிட்டது. உனது அரசாங்கத்திலிருந்து விரண்டோட முடியாது.
25.அல்லாஹ்வேஇ உன்னைத் தவிர எனது பாவங்களை மன்னிக்கக்கூடிய வேறெவரையும் நான் காணவில்லை. எனது அலங்கோலங்களை மறைக்கக்கூடியவன் உன்னையன்றி வேறு யாருமில்லை.
26.எனது அருவருப்பான செயல்களைஇ அழகிய செயல்களாக மாற்றக்கூடியவன் உன்னையன்றி வேறு யாருமில்லை. வணங்கி வழிபடுவதற்குறிய நாயன் உன்னையன்றி யாருமில்லை.
27.உன் புகழைக் கொண்டே துதிக்கிறேன். எனது மடலை துணிச்சலடைந்து எனது ஆத்மா என்கு அநியாயம் செய்துவிட்டது.
28-29. எனது எஜமானாகிய அல்லாஹ்வேஇ எனது எத்தனை அலங்கோலங்களை மறைத்துள்ளாய். எவ்வளவு பெரிய சோதனைச்சுமைகளைக் குறைத்துள்ளாய்.
30.எத்தனை பெரிய கஷ்டங்களிலிருந்து பாதுகாவல் அளித்துள்ளாய். எவ்வளவு கெடுதிகளைத் தடுத்துவிட்டாய்.
31.நான் அருகதை பெறாத எவ்வளவோ பெரிய புகழுக்கு உரியவனாக என்னை நீ ஆக்கிவிட்டாய்.
32.அல்லாஹ்வேஇ எனது நெருக்கடிகள் வளர்ந்து எனது நிலைமை மிகச் சங்கடமாகியுள்ளது.
33.எனது நற்செயல்கள் சுரிங்கிவிட்டன.
34.எனது விலங்குகள் இறுக்கமடைந்து உயர்ந்து இலட்சியங்கள் பயனற்றுப் போய் கைதியாக்கிவிட்டன. இந்த உலகம் எனது மடைமையைக் கொண்டு எனக்கு சதி செய்துவிட்டது.
35.எனது ஆத்மா தனது குற்றங்களைக் கொண்டு எனக்கு மோசம் பண்ணிவிட்டது.
36.என் எஐமானேஇ உனது கண்ணியத்தை முன்வைத்து கெஞ்சிக் கேட்கின்றேன். எனது கெட்ட செயல்களும்இ கெட்ட பழக்கவழக்கங்களும் எனது பிரார்த்தனை உன்னை வந்தடைவதற்கு திரையாக ஆகிவிட்டதே.
37.நீ தெரிந்து வைத்திருக்கும் எனது இரகசிய வாழ்விலுள்ள அந்தரங்கங்களை அம்பலமாக்கிவிடதே.
38.நான் தனித்திருக்கும் வேளையில் எனது மடமையினாலும்இ
39-40.எனது இச்சை மேலிட்டாலும்இ மறதியினாலும்இ தீய செயல்களினாலும் நான் செய்த தவறுகளுக்கு தண்டனையைப் பரிகாரமாக்கிவிடாதே.
41.நாயனேஇ அல்லாஹ்வேஇ உனது கண்ணியத்தின் மூலம் எனது எல்லா நிலைகளிலும் என்மீது இரக்கமுடையவனாக நீ இருப்பாயாக. மேலும்இ எனது எல்லாக் கருமங்களிலும் என்மீது கருணை காட்டுவாயாக.
42.என் இரட்சகனேஇ நாயனேஇ எனது நெருக்கடிகளைப் போக்குமாறும்இ எனது விடயத்தில் கரிசனை காட்டுமாறும் உன்னையன்றி வேறு யாரிடமும் கேட்க மாட்டேன்.
43.என் எஐமானேஇ என் நாயNஇ
44.நீ என் மீது ஓர் அதிகாரத்தை அமுலாக்கினாய். நானோ எனது இச்சைக்குப் பணிந்து
45.எனது எதிரியான ஷைத்தானிலிருந்து பாதுகாப்பு பெறாமல் மயங்கிஇ
46.என்னை எனது ஆசைகள் மயக்கிவிட்டன. அதனால்இ
47.உனது சில எல்லைகளை அத்துமீறித் தாண்டிவிட்டேன்.
48.எனது சில எல்லைகளை அத்துமீறித் தாண்டிவிட்டேன்.
49.உனது 'கழா' நியதி அமுலாக்கப்படும்போதும்
50.உனது சோதனையும்இ அதிகாரமும் என்னைக் கட்டுப்படுத்தும் போதும்
51.என் நாயனேஇ என்மா வரம்பு கடந்து அமல்களில் குறைவு செய்துவிட்டு
52.வருந்தியவனாகஇ திருந்தியவனாக எனது குற்றம் குறைகளை ஏற்றுக் கொண்டநிலையில் உனது சந்நிதியில் இதோ நிற்கின்றேன்.
53.என்னில் நிகழ்ந்துவிட்டதை ஒளிவு மறைவு இன்றி உன்னிடம் சமர்ப்பித்துவிட்டேன்.
54.எனது பணிவான இந்த பாவமீட்சியை ஏற்று
55.உனது பரந்த அருட்கடாட்சத்தில் என்னை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லைநாயனே.
56.அல்லாஹ்வேஇ எனது மன்னிப்பை 'கபூல்' செய்வாயாக. எனது கஷ்ட நஷ்டங்களில் அன்பு காட்டுவாயாக. எனது நெருக்கடிகளை போக்கிவைப்பாயாக.
57.படைத்தாளும் இரட்சகாஇ எனது உடலின் பலவீனத்தின் மீதும்
58.எனது தோலின் மென்மையின் மீதும் அருள்புரிவாயாக.
59.என்னைத் தொடக்கத்தில் உருவாக்கிஇ பராமரித்துஇ உணவளித்துஇ சிந்தனா சக்தியைத் தந்து நன்மை பல புரிந்தவன் நீயே.
60.நீ ஆரம்பத்தில் எனக்குப் பொழிந்த அன்பையும்இ அருளையும் மீண்டும் எனக்கு வாரி வழங்குவாயாக.
61.என் எஐமானேஇ நாயனேஇ என்னை ஆளும் வல்லோனேஇ உன்னை மட்டும் நம்பி வழிபட்ட பின் உனது நரகத்தில் போட்டு என்னை நீ வேதனை செய்வாய் என்று நான் நினைக்கவில்லை.
62.அதுவும் உன்னை அறிவதால் என் உள்ளம் நிரம்பி
63.உனது திக்ரினால் எனது நா நனைந்து எனது அகம் உனது நேசத்தால் உருகி
64.எனது பிரார்த்தனையும்இ உள்ளுணர்வும் உனது தெய்வீகத் தன்மைக்கும் முற்றிலும் அடிபணிந்துவிட்ட பின்னர்
65.என்னை தண்டித்து வேதனை செய்யக்கூடியவனாக உன்னை நான் காணவில்லையே. நீ மகா கருணையாளன்இ நீ உருவாக்கி வளர்த்து ஆளாக்கிய ஒருவனை பழுதாக்குவாயா?
66.நீ அபயமளித்து அரவணைத்துக் கொண்ட ஒருவனை அழித்து விரட்டுவாயா?
67.நீ அன்பு காட்டி ஆதரவு கொடுத்த ஒருவனை சோதனைக்குள்ளாக்குவாயா?
68.என் எஐமானனேஇ எனது பாதுகாவலனேஇ
69.உனது மகத்துவத்திற்காக உன்னைத் தொழுது பணிந்த சிரங்கள் மீதும்இ நன்றிக் கடனோடு உன்னைப் புகழ்ந்து
70.உனது தௌஹீதை உண்மையாகவே மொழிந்த நாவுகளின் மீதும்
71.உனது தன்னிகரற்ற தெய்வீகத்தன்மையை திட உறுதியோடு ஏற்றுக் கொண்ட இதயங்கள் மீதும்
72.உன்னைப் பற்றிய நாணத்தால் நிரம்பி
73.உன்னைப் பணிந்துவிட்ட உள்ளுறுப்புக்கள் மீதும் உனக்கு வழிபட்ட நிலையில் உன்னை வணங்கும் தேகங்களுக்கு
74.எல்லாம் விரைந்து சென்று தூய நல்லெண்ணத்தோடு பாவமன்னிப்புக் கோரிய உடல் அவயங்கள் மீதும்
75.நீ நரக நெருப்பை சாட்டித் தண்டிப்பாயா?
76.கருணையாளனேஇ சிருஷ்டிகர்த்தாவேஇசங்கையாளனேஇ நீ எனது பலவீனத்தை நன்கு அறிந்தவன்.
77.என் எஐமானனேஇ இந்த உலகின் சோதனைகளும்இ வேதனைகளும் இங்கு நிகழும் வெறுப்பான நெருக்கடிகளும் நிச்சயமாக அற்பமானவையேஇ வெகு சொற்பமான வேதனையே.
78-79. இவ்வுலகத்திலுள்ளவர்கள் மீது நடக்கும் வெறுப்பான விடயங்கள் மிகச் சிறிய காலத்தில் நீங்கிவிடக் கூடியவையே.அப்படியிருந்தும் கூட இவற்றையே தாங்கிக் கொள்ள சக்தி அற்ற நான்
80. மறுமையின் மிகக் கொடிய வேதனைகளையும்இ நீண்ட காலத் தண்டனைகளையும்
81. நிரந்தரமான சோதனைகளையும் நிரந்தரமான சோதனைகளையும்
82. எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?
83. இறைவாஇ வானங்களும் பூமிகளும்கூட ஈடுகொடுக்க முடியாத உனது கோபத்தினதும்இ பழிவாங்களினதும் அடையாளங்கள் அல்லவா அவை.
84. எளியஇ மிக அற்பமானஇ பரம ஏழையாகிய நான் உனது பலவீனமான அடிமையாகிய என்னால் எப்படி இத்தனை எபரிய தண்டனைகளுக்குத் தாக்குபிடிக்க முடியும்?
85. எனது எஐமானே! எனது நாயனே!! என்னைப் படைத்துப் பரிபாலிப்பவனே!!!
86. நான் எந்த விடயத்திற்காக உன்னிடம் முறையீடு செய்கின்றேன்இ எதற்காக உன்னிடம் அழுது பிரலாபிக்கின்றேன்?
87. கொடிய கடின வேதனைக்காகவா அல்லது நீண்ட நெடிய சோதனைக்காகவா?
88. நீ என்னை உனது எதிரிகளுடன் சேர்த்து தண்டிப்பாயேயானால்
89. உனது வேதனைக்குள்ளானவர்களுடன் என்னையும் சேர்த்துக் கொள்வாயேயானால்
90. உனது நேசர்களை (அவ்லியாக்களை) விட்டு என்னைப் பிரித்து விட்டாயேயானால் என்பதற்காகவே நான் உனது அருளை வேண்டி நிற்கின்றேன்.
91. என் எஐமானேஇ என் நாயனேஇ என்னைப் படைத்துப் பரிபாலிப்பவNஇ
92. நீ என்னை வேதனைக்குள்ளாக்கிய போது நான் பொறுத்துக் கொண்டேன். நீ என்னை விட்டுப் பிரிந்து இருப்பதை என்னால் எவ்வாறு பொறுத்துக் கொள்ள முடியும்?
93. உனது நரக நெருப்பின் சூட்டைத் தாங்கிக் கொண்டேன். உனது கண்ணியத்தைக் காணாமல் எப்படி இருப்பேன்.
94. அல்லது உனது பரந்த மன்னிப்பை இரந்து கேடகும் நான் நரக நெருப்பில் எவ்வாறு அமைதி அடைவேன்.
95. உண்மையாகவேஇ எனது எஐமானனேஇ உனது கண்ணியத்தி மீது சத்தியம் செய்து கொல்கின்றேன்.
96. அவலக் குரல் எழுப்புபவர்களின் அபயக் குரலாக நான் உன்னை அழைக்கின்றேன்.
97. சகலதையும் இழந்துவிட்டவர்களின் அழுகைக் குரலாக நான் உன்னை அழைக்கின்றேன்.
98. விசுவாசிகளின் பாதுகாவலனேஇ மெஞ்ஞானிகளின் இலக்கானவனேஇ
99. உதவி கோருவருக்கு உதவி செய்பவனேஇ உண்மையாளர்களின் உளப்பூர்வமான நண்பனேஇ
100. அனைத்து உலகங்களினதும் ஆண்டவனேஇ எனது நாயனேஇ உனது புகழைக் கொண்டே உன்னைத் துதிக்கின்றேன்.
101. தனது முரண்பட்ட செயலுக்காக சிறையிடப்பட்ட ஒரு முஸ்லிமான அடிமையின் அவலக் குரலை நீ கேட்கிறாய்.
102. அவன் தனது குற்றச் செயல்களுக்காக வேதனையைச் சுவைத்துக் கொண்டிருக்கின்றான்.
103. அவன் உன்னிடம் அபயம் தேடியவனாக அவலக் குரல் எழுப்புகிறான்.
104. உன்னை தௌஹீதுப்படுத்தியவர்களின் நாவினால் உன்னை அழைக்கின்றான். உனது பராமரித்தல்இ பாதுகாக்கும் உயர்ந்த தன்மையின் மீத நம்பிக்கை வைத்து உன்னிடம் உதவி தேடுகின்றான்.
105 . எனது எஐமானனேஇ உனது கடந்த கால அரவணைப்பை வேண்டி நிற்கும் அவன் எப்படி வேதனையில் நிலைத்திருக் முடியும்? உனது அருளையும் கொடையையும் கேட்டுத் துடிக்கும் அவனை நரக நெருப்பு எவ்வாறு நோவிக்க முடியும்?
106 . அவன் இருக்கும் இடத்தை நீ பார்த்துக் கொண்டிருக்கின்றாய். அவனது ஈனக்குரலை நீ கேட்டுக் கொண்டிருக்கின்றாய்.
107. இந்த நிலையில் தீப்பிழம்பு எப்படி அவனை எரிக்க முடியும்? அவனுடைய பலவீனத்தை நீயோ அறிந்தவன்.
108. நரகின் கொடிய சத்தத்தை அவன் எப்படிச் சகிப்பான்? அவனது உள்ளமே நீ அறிந்திருக்க அதன் படிகளில் அவன் எப்படிப் புரள முடியும்?
109. அவன் 'என் எஐமானே' என்று உன்னைக் கூவி அழைத்துக் கொண்டிருக்கும்போது நரகின் பாதுகாவலர்களான 'ஸபானியாக்கள்' அவனை எப்படி அடித்து விரட்ட முடியும்?
110. தன் விடுதலைக்காக உன் கருணைணை வேண்டி நிற்கும் ஒருவனை சிறைக்கைதியாக நீ எப்படி விட்டுவைப்பாய். ஒருபோதும் இது நடவாது.
111. உன் கொடையை மிஞ்ஞிய கொடையில்லை. உன்னை ஏகத்துவப் படுத்தியோருக்கு ஒப்பமில்லை.
112. திட்ட வட்டமாக உன்னை நிராகரிப்பவனை தண்டித்து உன்னோடு பிணங்கி நிற்பவனை வேதனையில் நிலைப்படுத்துவது என்று நீ சட்டமியற்றி தீர்ப்புச் செய்யாமல் இருந்திருந்தால்.
113. முழு நரகையும் குளமையாகவும் செழுமையாகவும் ஆக்கியிருப்பாய்.
114. அங்கு தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ எவரும் தங்கியிருக்க மாட்டார்கள். நிச்சயமாக உனது பெயர்கள் பரிசுத்தம் வாய்ந்தவை. மனிதர்களிலும் ஐpன்களிலுமுள்ள நிராகரிப்பவர்களைக் கொண்டு நரகத்தை நிரப்பி அடங்காப் பிடாரிகளை அதில் நிலைப்படுத்துவேன் என்று முன்னரே நீ சத்தியம் செய்துவிட்டாய்.
115. சங்கை மிக்க உனது அருள் ஓங்கி உனது புகழ் மகத்துவம் அடைந்துவிட்டது.
116. கெட்டவர்கள் விசுவாசிகளைப் போலிருப்பார்களா? அவர்கள் ஒருபோதும் சமமாக மாட்டார்கள் என்ற உனது வார்த்தை முந்திவிட்டது.
117. எனது எஐமானனே! என் நாயனே!! வியாபித்து உனது வல்லயையைக் கொண்டும்,
118. நீ முடிவு செய்துவிட்ட உனது தீர்ப்பைக் கொண்டும் உன்னிடம் கெஞ்ஞிக் கேட்கின்றேன்.
119. இந்த இரவிலே இந்த வேளையில் நான் செய்த குற்றங்களுக்காக உன் அருள் வேண்டி நிற்கின்றேன்.
120. நான் புரிந்த ஒவ்வோரு குற்றங்களையும் எல்லாப் பாவங்களையும்.
121. நான் மறைத்து எல்லா அருவருப்புக்களையும் நான் இரகசியமாகவோ அல்லது வெளிப்படையாகவோ செய்த எல்லா மடமை வேலைகளையும்
122. எனது உடல் உறுப்புக்களுடன் சேர்த்து எனது குற்றச் செயல்களை பக்குவமாக பதிவு செய்யுமாறு நீ பணிந்துள்ள 'கிறாமன் காத்திபீன்'கள் சங்கைக்குரிய பதிவாளர்கள் சாட்சியாக
123. அனைத்திற்கும் மிக மேலாக நீ என் இயக்கங்களின் மீது மிக உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றாய்.
124. என் குற்றங்கள் உன் அருளினால் மறைத்து
125. உன் கொடையால் ஒழித்துவிட்டாய்.
126. நீ இறக்கிவைத்துள்ள எல்லா நலவுகளிலிருந்தும் என் சௌபாக்கியங்களையும் அதிகப்படுத்துவாயாக. நீ வழங்கியுள்ள பேருகாரங்களிலும் நீ மறைத்துள்ள நன்மைகளிலும் நீ விசாலப்படுத்தியுள்ள கொடைகளிலும் மிகைப்படுத்தித் தந்தருள்வாயாக. நீ மன்னிக்கக்கூடிய

புதன், 18 நவம்பர், 2009

துல் ஹஜ் 01 ஹஸ்ரத் அலீ இப்னு அபீதாலிப் (அலை) அவர்களின் செல்வப் புதல்வன் இமாம் அலி (அலை) அவர்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஈரக் கொழுந்து ஹஸ்ரத் பாத்திமா ஸஹ்ரா (அலை) அவர்களும் திருமணம் முடித்த தினமாகும். இத்தினத்தில் அனைத்து முஸ்லிம்களுக்கும் வாழ்த்துத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.